Posts

Showing posts from November, 2021
வேளாண்மை தொடர்பான 3 சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவிவித்துள்ளார். இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த சட்டங்களைத் திரும்பப் பெற மாட்டோம் என்று பிடிவாதமாக கூறிவந்த பிரதமர் மோடி, இன்று (19 நவம்பர் 2021) திடீர் என அவற்றை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் உ.பி.சட்டமன்ற தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று அஞ்சி இந்த முடிவு எடுத்து இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.