Posts

Showing posts from May, 2022

இலங்கையை தொடர்ந்து திவாலாகும் மேலும் பல நாடுகள்!

இலங்கையைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் திவாலாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.உக்ரயின் போருக்குப் பிறகு பண வீக்கம், நிதிநிலை வீழ்ச்சி, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக இலங்கைக்கு பிறகு திவாலாகும் நிலையில் எகிப்து உள்ளது. உக்ரயின் நாட்டில் இருந்து மானிய விலையில் கோதுமை பெற்று வந்த எகிப்து, போரின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படுட்டுள்ளது. அடுத்து, துனிசியா, லெபனான், துருக்கி ஆகிய நாடுகளும் வெளிநாட்டு கடனால் விழிபிதுங்கி நிற்பதாக தெரியவந்துள்ளது. மேலும் அர்ஜெண்டினா, எல் சால்வடார், பெரு போன்ற நாடுகளும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றன. லெபனான் நாடும் கோதுமை, சூரியகாந்தி எண்ணெய்க்காக உக்ரயின் நாட்டை நம்பி உள்ளது. ரஷ்யாவின் அடாவடி போரினால் மனித உயிர்கள் மடிவதுடன் உலகின் பல நாடுகள் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது! எனவே போருக்கு எதிராக மனிதகுலம் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்! - மீராப்பிரியன்

பலஸ்தீன் வாலிபர் சுட்டுக் கொலை!

பலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் தொடுத்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்! சமீபத்தில் 16 வயது வாலிபர் ஒருவரை சுட்டுக் கொன்றது. அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீன மக்களில் சிறுவர் - பெண்கள் - முதியோர் என குறி வைத்து தாக்குவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது!

முதல்வர் அடித்த சிக்ஸர்!

சென்னை: திட்டங்கள் தொடங்க நேற்று பிரதமர் மோடி வருகை - இன்று கலைஞர் சிலை திறக்க துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வருகை! இரண்டிலும் ஸ்கோர் செய்தவர் முதல்வர் மு. க. ஸ்டாலின்! நேற்று கொதித்து பேசிய பிஜேபி அண்ணாமலை இன்று என்ன சொல்வார்? பத்திரிகையாளர்களையும் முறைக்கிறார்! தமிழ்நாடு திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுக்குமா? ( 28-05-2022)