திருப்பூர் மஸ்ஜித் குறித்த வழக்கில் தீர்வு காண நடவடிக்கை!

திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்த பள்ளிவாசல் மூடப்படும் அபாயம் தடுக்கப்பட்டது. சில மதவாத அமைப்புகளின் தூண்டுதல் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டதால், நீதிமன்ற உத்தரவு பெற்று நகராட்சி மஸ்ஜிதுக்கு பூட்டு போட வந்தபோது முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உட்பட போராட்டங்கள் நடத்தினர். இதனை அறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவரும் வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் விரைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து திருப்பூரில் பதற்றம் தணிக்க உதவினார். தலைமை செயலாளர் உட்பட அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்தார். திருப்பூர் சென்று மாவட்ட ஆட்சியர் வினித் மற்றும் தொகுதி எம். எல். ஏ. செல்வராஜ் உட்பட பிரமுகர்களை சந்தித்து பேசினார். வக்பு வாரியம் மூலம் உரிய ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு 3 வார அவகாசம் அளித்து, பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடந்தவும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!