ஹிஜாப் வழக்குகள்: உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை!

புதுடெல்லி: மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரக்கூடாது என்று கர்னாடக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்தது செல்லும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததற்கு முஸ்லிம் சமுதாயமும் ஜனநாயக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இது முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத சுதந்திரத்தை மறுப்பதாகும். மேலும் முஸ்லிம் மாணவிகளின் படிப்பைக் கேள்விக்குறி ஆக்கும் செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதுகுறித்து பல்வேறு அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீண்ட காலமாக இந்த வழக்கு விசாரணை தாமதம் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்குகள் அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Comments