வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்கள்!

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவுப்படி கூடலூர் பகுதியில் வெள்ளத்தால் உடைந்த பாலத்தை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். வெள்ளத்தால் குடிசைகள், வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், 102 நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, தண்ணீர், மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ** மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழையால் தாமிரபரணி அணை நிரம்பி வருகிறது. தாமிரபரணி அருவியில் நீர் கொட்டுகிறது. ** கர்நாடகத்தில் இருந்து மழை உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. காவேரி டெல்டா மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!