நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்கள் : பிஜேபி அரசு கட்டுப்பாடு!

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் பட்டியல் அடங்கிய வழிகாட்டு நூல் வெளியிடப்பட்டு உள்ளது. தங்களை எந்த சொற்களால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவற்றை தடுக்க பிஜேபி அரசு இந்த கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஜனநாயக விரோத செயல் என்றும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சர்வாதிகாரப் போக்கில் பிஜேபி ஒன்றிய அரசு செயல்படுகிறது என்றும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது! பட்டிலில் உள்ள சொற்களில் சில: அராஜகம், ரவுடித்தனம், முட்டாள்தனம், மோசடி, ஊழல்- லஞ்சம், கபட நாடகம், சர்வாதிகாரம், சர்வாதிகாரி, பொய், காலிஸ்தான் மற்றும் பல.

Comments