ஆ. ராசா சொன்னது பாடநூலில்!
தி. மு. க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஏதோ தவறாகப் பேசிவிட்டதாக பாசிச பிற்போக்குவாதிகள் துள்ளிக் குதிக்கிறார்கள்! பெரியார் பேசாத ஒன்றை - டாக்டர் அம்பேத்கர் எதிர்த்து புறக்கணிக்காத ஒன்றை அவர் பேசினாரா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தம்மை இழிவுபடுத்தும் சித்தாந்தம் குறித்து தான் அவர் கோபமாகப் பேசினார். சி. பி. எஸ். இ. வரலாறு புத்தகத்தில் மனுஷ்மிருதியின்
நாலு வர்ணத்தை பாடமாக வைத்துள்ளதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒன்றிய அரசின் சி. பி. எஸ். இ. ஆறாம் வகுப்பு வரலாறு புத்தகத்தில் இந்தப் பாடம் உள்ளது.( படம் பார்க்கவும்! )
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களின் மனதில் ஜாதிகளின் அடிப்படையில் வேறுபாட்டை புகுத்தி நஞ்சை ஊட்டி பிரித்தாளும் சூழ்ச்சி செய்து அரசு உயர் பதவியில் இருப்போர் யார் என்ற விழிப்புணர்வு அனைத்து சமுதாய மக்களுக்கும் வர வேண்டும்.
* தகவல்: ஜமால் முஹம்மது.

Comments
Post a Comment