இதழியல் சாதனை புரிந்த ஆதித்தனார்!
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேய கொடுங்கோல் அரசின் அடக்குமுறையை எதிர்த்து , நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன. அப்படி ஒரு அறவழிப் போராட்டம் மதுரையிலும் நடந்தது.
அந்தப் போராட்டத்தில் ஆங்கிலேய அரசின் சூழ்ச்சியால் கலவரம் ஏற்பட்டது. ஆங்கிலேய அரசின் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள். ஆனால், ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட வேண்டும் என்று காவல்துறையினர் கட்டளையிட்டார்கள்.
அப்போது மதுரையிலிருந்து
மதுரை முரசு என்ற இதழை நடத்தி வந்த சி.பா.ஆதித்தனார்
மதுரையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு! மூன்று பேர் சாவு!" என முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டார்.
அதைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரிகள் போர்க்கால அதிகாரத்தைப் பயன்படுத்தி மதுரை முரசு இதழைத் தடை செய்தனர்.
அதிகாரிகள் ஆணை பிறப்பித்தாலும் உண்மைச் செய்தியை வெளியிட ஆதித்தனார் தயங்கியது இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். அவர்களின் தமிழ்ப் பற்றும் இதழியல் சாதனையும் போற்றத்தக்கது.
( சி. பா. ஆதித்தனார் பிறந்த தினம்
செப்டம்பர் 27 )

Comments
Post a Comment