ஒரு வார காலத்துக்கு கொரோனா ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிப்பு செய்யப்பட்டதோடு சென்னை ரங்கநாதன் தெரு கடைகள் மூடப்பட்டது, பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. வியாபாரிகளும் ஜவுளிக்கடை ஊழியர்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள். ஏற்கனவே பல மாதங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் முடக்கும் ஊரடங்கை அமல்படுத்துவது சரியில்லை என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து !
Posts
உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகள் !
- Get link
- X
- Other Apps
உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நீண்ட காலத்துக்குப் பிறகு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டும் அது ரத்து செய்யப்பட்டது. 1) வார்டு வரையறை 2) இட ஒதுக்கீடு 3) 9 மாவட்டங்கள் பிரிப்பு முதலான பிரச்சினைகளை தி.மு.க. எழுப்பி நீதிமன்றத்தை அணுகியதால் புதிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டும் சிக்கல் நீடிக்கிறது. மீண்டும் திமுக உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் ஆணையம் மீறியுள்ளதாக திமுக புகார் கூறியுள்ளது. இதனால் தேர்தல் மேலும் தாமதமாகும் என தெரிகிறது !
அன்பான வாசகர்களே!
- Get link
- X
- Other Apps
தரமான செய்திகளையும் சிந்தனைகளையும் வழங்குவதற்காக இந்த வலைப்பக்கத்தை ( namathu seythi) தொடங்கியுள்ளேன். உங்கள் செய்தி ( Ungal seythi ) எனும் பெயரில் உள்ள பிளாக்ஸ்பாட் பக்கமும் பிரபலமாகிவருகிறது ! நமது செய்தி எனும் பெயரில் முகநூலில் தொடர்ந்து தலைப்பு செய்திகளை வழங்கி வருகிறேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். -ஜே.மீராமைதீன் ஆசிரியர்