பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!
எம்பி பதவியைப் பறித்து இந்தியாவின் பெரும் இயக்கமான காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியையே முடக்கும் அளவுக்கு பாசிசவாதிகள் சதி செய்து வருகிறார்கள்.
இப்போதாவது புரிகிறதா ?
பாசிச ஆர். எஸ். எஸ்.சும், பா.ஜ.க.வும்,
முஸ்லிம்களுக்கு
மட்டும் எதிரி அல்ல ,
அது மனித குலத்திற்கும் சமத்துவம்,
ஜனநாயகம்,சமநீதி,
சகோதரத்துவம்,
மதச்சார்பின்மை என எல்லாவற்றிற்கும் எதிரானதுதான் என்று...!
முஸ்லிம் சமூகம் குறிவைத்து ஒடுக்கப்படும்போது பாராமுகமாக கடந்துபோனவர்களே,
இப்போது தெரிகிறதா ?
வலியும் வேதனையும் என்னவென்று ?
ஒரு மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் எவ்வளவு சர்வ சாதாரணமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஒரு மதசார்பற்ற மண்ணில் மதவெறி எந்த அளவிற்கு தலைவிரித்தாடுகிறது?
யாருக்கோதானே நடக்கிறது, நமக்கென்ன என இருந்ததின் விளைவு இப்போது ஊருக்கே என மாறும்போது வலிக்கிறதல்லவா ?
செய்யவேண்டிய நேரத்தில் செய்யவேண்டியதை செய்யத் தவறியவர்களால் இன்று அவர்கள் தலையிலேயே இடி விழுகிறது.
இனியேனும் விழித்துக்கொண்டால் அனைவருக்கும் நன்று
என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை!
* - அச.உமர் பாரூக்

Comments
Post a Comment