ஒன்றிய அரசின் பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து பொது துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். எல். ஐ. சி. உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என ஒன்றிய- மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அரசுத் துறை ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
Posts
- Get link
- X
- Other Apps
வேளாண்மை தொடர்பான 3 சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவிவித்துள்ளார். இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த சட்டங்களைத் திரும்பப் பெற மாட்டோம் என்று பிடிவாதமாக கூறிவந்த பிரதமர் மோடி, இன்று (19 நவம்பர் 2021) திடீர் என அவற்றை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் உ.பி.சட்டமன்ற தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று அஞ்சி இந்த முடிவு எடுத்து இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.
- Get link
- X
- Other Apps
டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பெற்றோர் அனுமதியின்றி எரியூட்டப்பட்டுள்ளார் ! குற்றவாளிகளில் பூசாரியும் ஒருவர். வன்கொடுமை, பாலியல் குற்றம் முதலான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலியான அந்த சிறுமியின் பெற்றோருக்கு நீதி கிடைக்குமா ?