ஒன்றிய அரசின் பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து பொது துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
எல். ஐ. சி. உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என ஒன்றிய- மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அரசுத் துறை ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!
மதவெறியர்களை தூக்கி எறிந்த கர்நாடக மக்களுக்கு நன்றி...! வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்...! ஆபரேஷன் லோட்டஸ் எனும் அயோக்கியத்தனத்திற்குள் சிக்கிவிடாமல் இருக்க பெரும் பதற்றத்தில் காங்கிரஸ் தலைவர்களின் நிலை...! கிங் மேக்கர் என கருதப்பட்ட குமாரசாமியின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம்...! முதல்வராக சித்தும்,சிவமும் சண்டையிடாமல் தவிர்ப்பது நன்று...! மொத்தத்தில் பாசிசம் வீழ்ந்துள்ளது. காங்கிரஸ் எழுந்துள்ளது! இனி தக்கவைப்பது காங்கிரஸ் கையில்தான். மீண்டும் ! - அச.உமர் பாரூக்
Comments
Post a Comment