அமெரிக்க அமைச்சர் கண்டனம்!

இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அமெரிக்காவின் மக்கள்தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே இந்துக்கள் வசிக்கிறார்கள். அதிகமான கோயில்களும் இங்கு உள்ளன. ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் தாக்குதலும் நடைபெறவில்லை. ஆனால் பிஜேபி ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, 10 மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது போன்ற மதப் பாகுபாடு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அந்தப் போக்கை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!