யோகி பதவி விலக கோரிக்கை!
முஹம்மது நபி ( ஸல் ) பற்றி இழிவாகப் பேசிய பிஜேபி செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா உள்ளிட்டவர்களை கைது செய்து தண்டனை வழங்க கோரி உ. பி. அலஹாபாத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்களின் மீது தேச விரோத சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களின் வீடுகளை இடிக்க உத்தரவிட்ட உ. பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியா சர்வாதிகார நாடு இல்லை என்றும் ஜனநாயக போராட்டம் நடத்திய சிறுபான்மையினர் மீது அடக்குமுறையை ஏவி விடும் யோகி போன்றவர்கள் முதலமைச்சர் போன்ற உயர் பதவி வகிக்க தகுதி இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
Comments
Post a Comment