விதிகளை மீறி வீடுகளை இடிக்க உச்சநீதிமன்றம் தடை!
புதுடெல்லி: உ. பி.யில் சட்டத்துக்குப் புறம்பாக - விதிகளை மீறி வீடுகளை இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. விளக்கம் கேட்டு முதலமைச்சர் யோகி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் குறித்து அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய முஸ்லிம்களின் வீடுகளை இடிக்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஒரு பெண் சமூக ஆர்வலர் வீடு உட்பட பல வீடுகள் இடிக்கப்பட்டதற்கு இந்தியாவிலும் உலக அளவிலும் கண்டனம் எழுந்தது.
இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பு தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Comments
Post a Comment