குஜராத் கலவரம் : புதிய தீர்ப்பு!

குஜராத் கலவரத்தில் நூற்றுக் கணக்கில் சிறுபான்மை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதில் அப்போது முதலமைச்சராக இருந்த மோடி மற்றும் 53 பேர் தான் குற்றவாளிகள் என்று முன்னாள் எம். பி. ஜாப்ரியின் மனைவி ஜகியா தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில் மோடி அந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஒரு மாநிலத்தில் நடைபெறும் கலவரத்துக்கு அம்மாநில முதல்வர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். கலவரம் நடப்பதை நிறுத்தி உயிர்ப் பலிகளைத் தடுக்க வேண்டும். ஆனால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாக மோடி காரணமாக இருந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. உதாரணமாக முன்னாள் எம். பி. ஜாப்ரி, கொலைகாரக் கும்பல் தன் வீட்டைச் சூழ்ந்தபோது, போலீஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் மோடிக்கும் போன் செய்தார். ஆனால் எந்தப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை. அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!