முடிவுகள் அறிவிக்காத அதிமுக நிர்வாகிகள் கூட்டம்!
சென்னை: அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தலைமை நிலையத்தில் நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்ந்தெடுப்பது குறித்த முடிவை இன்று அறிவிக்கவில்லை.
பழனிசாமி தரப்பு சுறுசுறுப்பாக செயல்படுவதால், மதுரையில் மாஸ் காட்டிய ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை புறப்பட்டு வருகிறார்.
Comments
Post a Comment