டி. என். பி. எஸ். சி. குழு 4 தேர்வு: 84% பேர் எழுதினர்!
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணைய ( டி. என். பி. எஸ். சி. ) 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களுக்கான குழு 4 தேர்வுகள் இன்று நடைபெற்றது. 84% பேர் எழுதினர்.
இளநிலை
உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், கிராம நிர்வாக அலுவலர் முதலான பணிகளுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 18.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
தமிழ் மொழி குறித்த கேள்விகள் எளிதாக இருந்ததாகவும் பொது அறிவு கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் கூறினர்.
நீக்கப்பட்ட திட்டமான திருமண உதவித் திட்டம் பற்றி கேள்வி கேட்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
Comments
Post a Comment