மரணம் அடைந்த மாணவி தங்கியிருந்த விடுதி முறையான அனுமதி பெறவில்லை!
கள்ளக்குறிச்சி: மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி கள்ளக்குறிச்சி சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவி தங்கியிருந்த விடுதி முறையான அனுமதி பெற்று செயல்படவில்லை. அந்த விடுதி உரிய விதிமுறைகளைக் கடைபிடித்து இருந்தால், மாணவிக்கு இந்த விபரீதம் ஏற்பட்டிருக்காது என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாதிக்கப்படும்போது அவர்களின் பெயர்- அடையாளங்களை வெளியிடக் கூடாது என்று ஊடகங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
Comments
Post a Comment