பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம்! - முதல்வர்
சென்னை: அரசு பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ மாணவிகள் பயன் அடையும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலை தூர கிராமங்களின் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். இதன் மூலம் 1,545 பள்ளிகளில் 1,14,095 மாணவ மாணவிகள் பயன் அடைவார்கள். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment