பரபரப்பான மாரி தொடர்! பிரமிளா போல் அசத்தும் நாயகி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாரி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழப்போகும் ஆபத்துகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் தெய்வீக சக்தி கதாநாயகிக்கு இருப்பதாக கதை! அந்த நடிகை ஆஷிகா படுகோனே அப்படியே பழைய நடிகை பிரமிளாவைப் போல் இருக்கிறார்! அவர் மற்றவர்களைக் காப்பாற்ற ஓடும் காட்சிகள் பரபரப்பாக திரைப்படம் போல் காட்சியாக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. அவரது நடிப்பும் புது நடிகை போல் காணப்படவில்லை. தனது அபூர்வ சக்தியால் மாரி பல பேரைக் காப்பாற்றுகிறாள். ஆனால் அவளை அப சகுனக்காரி என்று திட்டி, ஊர் மக்கள் ஊரை விட்டு விரட்டுகிறார்கள். குறிப்பாக மாரியின் தோழியின் அம்மாவாக நடிக்கும் நடிகை வனிதா, குளத்தில் குதிக்கும் தன் மகளைக் காப்பாற்றும் அப்பாவிப் பெண் மாரியின் மீது வெறுப்பை உமிழ்கிறார்! அவர் மாரியை ராட்சசி போல் தாக்குவதும் - விரட்டி அடிப்பதும் பெண் ரசிகர்களை கலங்கடிக்கும்! மாரி கதாநாயகனைக் காப்பாற்றும் காட்சி கூட விறுவிறுப்புதான்! - மீராப்பிரியன்

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!