புதிய குடியரசுத் தலைவராகும் முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து!
புதுடெல்லி: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒடிசா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவர் 2824 வாக்குகள் பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 1877 வாக்குகள் பெற்றார்.
15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முர்முவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment