கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு!
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் அடைந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று பள்ளி நிர்வாகிகள் 5 பேர் ஜாமீன் கோரி மனு செய்தனர். அது குறித்து இன்று நடந்த விசாரணையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்து விட்டார்.
Comments
Post a Comment