ஊராட்சிகளில் இணைய தள சேவை!
சிவகங்கை: பொதுமக்களுக்கு அனைத்து சேவைகளையும் இணைய தளம் வழியாக வழங்கிடும் வகையில் மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளிலும் இணைய தள இணைப்பு வழங்கும் பணி நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார மைய சேவை கட்டிடத்தில் தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேசன் இணைய தள சேவை கருவிகள் மற்றும் வட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மேலும் கவுரிப்பட்டியில் உள்ள சென்னலக்குடி முகாம் வாழ் தமிழர்களின் குடியிருப்பை அவர் ஆய்வு செய்தார்.(படம்)

Comments
Post a Comment