சி. எஸ். ஐ. ஆர். தலைமை இயக்குநராக கலைச் செல்வி நியமனம்!

புதுடெல்லி : இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமான சி. எஸ். ஐ. ஆர். என்று அழைக்கப்படும் இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுத் துறை கூட்டமைப்பு தலைமை இயக்குநராக மின் வேதியியல் துறை விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காரைக்குடியில் அமைந்துள்ள 'சிக்ரி'யில் (இந்திய மின்வேதியியல் மற்றும் ஆய்வு நிறுவனம்) இயக்குநராகப் பணியாற்றி வந்தார். லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்ட மின் கலன்கள் குறித்த ஆய்வுகள் செய்துள்ளார். பல்வேறு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். கண்டுபிடிப்புகளுக்கான 6 காப்புரிமைகள் பெற்றுள்ளார்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!