நல்லிணக்க நாயகன்!
**இந்திய
மக்கள் மனத்தை
கொள்ளையடித்த
மத நல்லிணக்க நாயகன்!
**நாட்டையும்
நாட்டு மக்களையும்
நேசித்த விஞ்ஞானி!
மாணவர்களின்
மனம் கவர்ந்த
பேராசான்!
**நான் இஸ்லாமியன்
என
சொல்லாமல்
செயலில்
காட்டினார்!
அதன்
எளிய - நேர்மையான
வாழ்க்கை
வாழ்ந்தவர்!
**கற்றதை மற்றவர்களுக்கு
கற்றுக் கொடுக்க வேண்டும்
என்ற நபிகள் நாயக வாக்கை
வழுவாது பின்பற்றியவர்!
**கிராமத்தில் பிறந்து
நாட்டின் அதிபராய் -
குடியரசுத் தலைவராய்
உயர்ந்து
தம் வாழ்வைப் பாடமாய்
படிக்க வைத்தவர்!
எல்லோரும்
ஏற்றுக் கொண்ட மாமனிதர்!
**இளைஞரை கனவு
காணச்
சொல்லி
லட்சியம் நோக்கி
நடைபோடச் செய்தவர்!
வாழிய அவர் புகழ் வாழியவே!
- ** மீராப்பிரியன்

Comments
Post a Comment