நூல் அறிமுகம்: புனித பூமியிலே... நாவல்!
யூனிக் புக்ஸ் நிறுவனத்தின் புதினங்களின் வரிசையில்...
சுல்தான் ஸலாஹூத்தீன் அவர்களின் வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலாகும் இது!
தமிழகத்தில் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஹஸன் எழுதிய வரலாற்று நாவல்களில் முக்கிய இடத்தில் உள்ளது "புனித பூமியிலே" என்ற புதினமாகும்.
இஸ்லாமிய உலகின் முக்கிய பிராந்தியமாக திகழும் ஜெருசலத்தினை மையப்படுத்தி நிகழ்த்தப்பட்ட சிலுவை யுத்தங்களின் தொடர்ச்சியாக நிகழ்ந்த
மூன்றாம் சிலுவைப் போரின் முக்கிய தளபதி இங்கிலாந்தின் மன்னர் ரிச்சர்ட் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன்
சிலுவை யுத்தங்களின் தவிர்க்கமுடியாத சுல்தான் சலாஹுத்தீன் அவர்களின் வீரச் செயல்களை கதையம்சமாக - அதே சமயம் வரலாற்று திரிபுகளை கிஞ்சிற்றும் செய்திடாமல் எழுதப்பட்ட காவியமே
*புனித பூமியிலே* ஆகும்.
இந்நாவல் பலஸ்தீனத்தை உள்ளடக்கிய ஜெருசலத்தினை கைப்பற்ற நடத்திய போரை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஜெருசலத்தை மீட்க முடியாத நிலையினை எட்டிய நிலையில் அவர் *சுல்தான் சலாஹுத்தீனுடன்* சமாதானத்தை மேற்கொண்டதைக் கதைக் கருவாகக் கொண்டது.
விலை : 230
*தொடர்புக்கு : Call / WhatsApp / TeleGram / Signal : *9176277692*
*பணப்பரிமாற்றம்* : *Gpay : 9176277692 Haja Nawaz உடன்*

Comments
Post a Comment