தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள் கூட்டம்!
சென்னை: பெரம்பூர் ரஹ்மானிய்யா பள்ளிவாசலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் இணைந்த ஆலோசனைக் கூட்டம் 28-11-2022 அன்று நடந்தது.
ஈரோட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தவுள்ள மாநில மாநாட்டுக்கு தேவையான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாநிலத் தலைவர் மௌலானா பி. ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



Comments
Post a Comment