சென்னையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒன்றிய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் திராவிட முன்னேற்றக் கழக எம் பி ஆலந்தூர் ஆர். எஸ். பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, எஸ்டிபிஐ பொது செயலாளர் அ.ச. உமர் பாருக், விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன், மமக அமைப்பு செயலாளர் புழல் சேக், மதிமுக செங்குட்டுவன் என பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!