பண்பால் உயர்ந்த உள்ளமே!

( மறைந்த தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் உபயதுல்லா பற்றி இரங்கல் கவிதை! ) * அன்பால், பாசத்தால், அரவணைப்பால், அனைவரையும் நேசிக்கும் ,
பண்பால் உயர்ந்த உள்ளமே ! * உறவையும், நட்பையும் ஒருசேர உறவாடும் உன்னத மனிதனே ! மதமாச்சரியம் இல்லாத மதங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேய அடையாளமே ! * வியாழன் தோரும் வறியவருக்கு வாரி வழங்கிய வள்ளலே ! இல்லை என்று வருவோர்க்கு இல்லையெனாது வழங்கிய தமிழ்வேல் வள்ளலே ! * திருக்குறள் , தேவாரம், திருப்புகழ் , கம்பராமாயணம், தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம் என்றே நூல்கள் பல பயின்று தமிழருவியாய் உரையாற்றும் தமிழறிவு களஞ்சியமே ! * திருமண நிகழ்வில் கலந்து மகிழ்ந்த வேளையிலே காலன் வந்து விட்டானோ ? அறம் பாடி விரட்டாமல் - கண் அயர்ந்து விட்டாயோ ? * காலன் பணிமுடித்தானோ ? கண்ணீரில் மிதக்க விட்டாயே ! * அல்லாஹ்வின் திருவடியில் இளைப்பாறச் சென்றாயோ ? உன்னை இழந்து வருந்தும் உறவுக்கு, நட்புக்கும் ஆறுதல் சொல்வது யார்? யார்? யார்? ****** - தஞ்சை ந.இராமதாசு

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!