புதுக்கோட்டை மாவட்ட அரசு காஜி மவ்லவி என். அமானுல்லா இம்தாதி காலமானார்!
புதுக்கோட்டை: சிராஜ் முனீர் அரபிக் கல்லூரியினுடைய முதல்வரும் புதுக்கோட்டை மாவட்ட அரசு காஜியுமான மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.அமானுல்லா இம்தாதி 12-07-2023 அன்று காலமானார். மஹ்ரிப் தொழுகைக்கு பின் ஜாமியா ஸிராஜூம் முனீர் அரபிக்கல்லூரியில் ஜனாஸா தொழுகையும் கலீப் நகர் மையவாடியில்
நல்லடக்கம் நடைபெற்றது. அன்னாரின் பிழைகளை மன்னித்து உயர்ந்த சொர்க்கத்தை வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முகம்மது அஷ்ரப் அலி தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

Comments
Post a Comment