Posts

சதுரங்க ஒலிம்பியாட் போட்டி : இந்திய வீரர்கள் வெற்றி!

மாமல்லபுரம்: சர்வதேச அளவில் இரண்டாவது நாளாக நடைபெறும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் களம் இறங்கின. இதில் இன்று சாதனை வீரர் பிரக்யானந்தா போட்டியில் பங்கேற்றுள்ளார். பல்வேறு நாடுகள் சார்பில் வீரர்- வீராங்கணைகள் விளையாடும் இந்த போட்டியில் மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார். இந்தியா சார்பில் 3வது அணியில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த நந்திதா சிங்கப்பூர் வீராங்கணையை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி! -முதல்வர் மு. க. ஸ்டாலின்

Image
மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாகும் என்று மலையாள மனோரமா ஊடக கருத்தரங்கில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசினார். தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு நாட்டு நலனுக்கு - மக்களுக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே மொழி என்பது தேசத்துக்கு விரோதமானது. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றார். மலையாள உடன்பிறப்புகளே என்று குறிப்பிட்டு, சில வாக்கியங்களை மலையாள மொழியில் பேசி அசத்தினார் முதல்வர்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரிய பணி!

Image
நன்றி : மணிச்சுடர் நாளிதழ்

நடனம் ஆடும் பாலம் சரி செய்யப்படுமா?

நன்றி : ஸ்பை நியூஸ்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு!

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் அடைந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று பள்ளி நிர்வாகிகள் 5 பேர் ஜாமீன் கோரி மனு செய்தனர். அது குறித்து இன்று நடந்த விசாரணையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்து விட்டார்.

சாமானிய மனிதனையயும் பாதிக்கும் ஜி. எஸ். டி. வரி!

Image
ஒன்றிய பிஜேபி அரசின் சாதனை!

மூத்த இதழாளர் நூருல்லா நூல் வெளியீடு!

Image