Posts

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா ஆலோசனைக் கூட்டம்!

Image
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75ஆம் ஆண்டு பவள விழா தேசிய மாநாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு தொடர்புடைய கட்சியின் 9 மாவட்டங்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்திற்கு தேசிய தலைவர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் தாங்கினார். மாநில துணை செயலாளர் இப்ராஹிம் மக்கி கிராஅத் ஓதினார். பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் வரவேற்றார். பொருளாளர் ஷாஜஹான், முதன்மை துணை தலைவர் - தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான், துணை தலைவர் நவாஸ்கனி எம். பி., மாநில செயலாளர்கள் காயல் மகபூப், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், நிஜாமுதீன், துணை செயலாளர் ஆப்பனூர் ஜபருல்லாஹ், மகளிர் அணி தேசிய தலைவர் பாத்திமா முசப்பர், கே. எம். சி. சி. பொதுச்செயலாளர் சம்சுதீன் அபூபக்கர், இளைஞர் அணி பொதுச்செயலாளர் அன்சாரி மதார், மாணவர் அணி மாநில தலைவர் பழவை அன்சாரி ஆகியோர் உரையாற்றினர். தேசிய மாநாட்டிற்கு மாவட்டம் முழுவதும் வரவேற்பு குழு உறுப்பினர்கள் சேர்ப்பது என்றும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை அழைப்பது என்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வது என்பது உட்பட பல தீர்மான...

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள் கூட்டம்!

Image
சென்னை: பெரம்பூர் ரஹ்மானிய்யா பள்ளிவாசலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் இணைந்த ஆலோசனைக் கூட்டம் 28-11-2022 அன்று நடந்தது. ஈரோட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தவுள்ள மாநில மாநாட்டுக்கு தேவையான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநிலத் தலைவர் மௌலானா பி. ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

போலி பத்திரப் பதிவு : விழிப்புணர்வு கொள்வோம்!

Image
போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது! பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்! நிலத் தகராறு, பட்டா* மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள். நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு, உங்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவிக்கவும். (Land Disputes) 1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது *பட்டா* மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018 சென்னை உயர்நீதிமன்றம் - W. P. No - 24839/2014, dt - 16.7.2018 W. P. No - 491/2012, dt - 4.6.2014 W. P. No - 16294/2012, dt - 4.4.2014 2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால், அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும். மற்றவர்களுக்கு பட...

நல்வழி காட்டும் நபிமொழிகள் : இதுவே அவர் செய்யும் தர்மம்!

Image
*தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் ( ஸல் ) கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர். அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய- உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.* நூல்: *📚புகாரி-1445.*

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு விழா மாநாடு 'லோகோ' வெளியீடு!

Image
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1948 மார்ச் 10 அன்று கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களை அமைப்பாளராக (கன்வீனராக )க் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்காக பரிணாமம் பெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு விழா வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை தீவுத்திடலில் அகில இந்திய மாநாடாக நடைபெறவுள்ளது. இது தொடர்பாக இன்று ( 23/11/2022 ) கேரளாவில் 75 ஆம் ஆண்டு பவள விழா மாநாட்டு சின்னத்தை ( லோகோவை ) தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப், தேசிய அரசியல் ஆலோசனை குழு தலைவரும் கேரள மாநில தலைவருமான பானக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்கள் ஆகியோர் வெளியிட்டனர். தேசிய பொதுச் செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி, தேசிய பொருளாளர் பி.வி. அப்துல் வஹாப் எம்.பி., தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ( முன்னாள் எம் எல் ஏ ), கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்துஸ் சமது சமதானி, ஈ.டி. முஹம்மது பஷீர், கே. பி. அப்துல் மஜ...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு விழா! மூத்த இஸ்லாமிய அறிஞர் வாழ்த்து!

Image
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா வரும் 2023 மார்ச் 10 ஆம் நாளில் சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து மூத்த இஸ்லாமிய அறிஞர் மவ்லவி எம். எம். மதனி ஹஸ்ரத் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: காயிதே மில்லத், பாபக்கீஹ் தங்ஙள், மஹ்பூபே மில்லத் சுலைமான்சேட்ஜீ, முஜாஹிதே மில்லத் பனாத்வாலா, கேரளச் சிங்கம் CH முஹம்மது கோயா, மறுமலர்ச்சி அதிபர் மவ்லவி A.K.ஜமாலி, தாய்ச்சபை தளபதி திருப்பூர் முஹ்யித்தீன், சந்தனத் தமிழறிஞர் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது, எளியோரின் தோழர் முன்னாள் எம் பி காஜா முஹ்யித்தீன், நாடறிந்த நாவலர் A.M.யூசுப், பிரச்சார பீரங்கி M.M. பீர்முகம்மது, அற்புத திறன்மிக்க பன்மொழி அறிஞர் அப்துல் லத்தீப், இன்றைய முத்தான தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M.காதிர் முஹ்யித்தீன் ஆகிய அளப்பெரும் ஆற்றல்மிக்க ஆன்றோராகிய தலைவர்களுடன் பழகிய, பயணம் சென்ற, உரையாடிய, உறவாடிய, மிகச்சில முஸ்லிம்லீக் மூத்த ஊழியரில் நானும் ஒருவன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க ஆவலாக உள்ளேன் என்று மதுரையில் வசிக்கும் 80 வயது மூத்த இஸ்லாமிய அறிஞர் மவ...

இனிய திசைகள் நவ.2022 சேமுமு சிறப்புக் கட்டுரை!

Image