Posts

ஷார்ஜாவில் புதிய ரெஸ்டாரண்ட்!

Image
ஷார்ஜாவின் முவைலா பகுதியில் கார்லிக் அண்ட் ஜின்ஜர் என்ற புதிய இந்திய ரெஸ்டாரெண்ட்டை அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் மாலா மெக்ரா மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதன் பின்னர் அவர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சென்னை மதரஸயே ஆஸம் பள்ளி வளாகத்தில் எலைட் பள்ளி திட்டத்திற்கு எதிர்ப்பு!

Image
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஏழை இஸ்லாமிய மாணவர்களுக்கான மதரஸயே ஆஸம் பள்ளி வளாகத்தில் தொடங்க உள்ள எலைட் பள்ளி திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரஸே-யே-ஆஸம் மேல்நிலைப்பள்ளி, என்பது 150 வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் வாழும் முஸ்லிம் மாணவர்களுக்கு குறிப்பாக ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இப்பள்ளியில் படித்தவர்கள் இன்றளவும் உயர் பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனர். இப்பள்ளி ஹாக்கி விளையாட்டிலும் மிகவும் பெயர் பெற்றது. இப்பள்ளியில் மாணவர்கள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தும், பல மாணவர்கள் தமிழ்நாடு மாநில ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும், இப்பள்ளியானது ஏழை முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காக ஆற்காடு நவாப்களால் உருவாக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் இவ்விடம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பெரும்பகுதி இடம் தற்போதுள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியாக மாறியுள்ளது, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள இப்பள்ளி வளாகத்தில் விளையாட்டு துறை சா...

மகளிர் உதவித் தொகை பெற வழிகாட்டிடுவீர்!

Image
முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளும் பயன்பெற சமுதாய அமைப்புகள் உதவிட வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு : தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் கோரிக்கை!

Image
சென்னை: முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் தனது பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றயுள்ளது. தொண்டு இயக்கப் பொதுச்செயலாளர் முனைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி தீர்மானங்களை வாசித்தார். பொது சிவில் சட்டம் கொண்டுவரும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மணிப்பூர் கலவரம் - பெண்கள் பாலியல் வன்கொடுமையை தடுக்காத ஒன்றிய - மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் மேலும் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மான் சரோவர் - இந்தியாவின் பகுதி! சீனாவுக்கு உணர்த்திய ஒளரங்கசேப்!

Image
*'பேரரசர் ஔரங்கசேப், அப்போதைய சீன நாட்டின் சிங் வம்ச மன்னர் முதலாம் ஷுன்ஜிக்கு எழுதிய கடிதத்தில், கைலாஷ் மானசரோவர் இந்தியாவின் ஒரு பகுதி. அது மட்டுமின்றி, அது " எங்கள் இந்துசகோதரர்களுக்கு புனிதமானஇடம். எனவே, அந்த இடத்தை விட்டுவிலகுங்கள்" என எழுதினார்". *வரலாற்று குறிப்பில் ஒரு பகுதி இதுவரை யாரும் அறிந்திடாத ஒன்றை பற்றி காண்போம்.. *சிவனின் இருப்பிடமான கைலாஷ் மானசரோவர் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ளது.*. *நம் நாட்டு விடுதலைக்குப் பிறகு, சீனா கைலாஷ் பர்வத் (கைலாசமலை) அல்லது கைலாஷ் மானசரோவர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆக்ரமித்ததால் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஐநா அவைக்குச் சென்று, "சீனா எங்கள் பகுதியை வலுக் கட்டாயமாக ஆக்ரமித்துள்ளது. எங்கள் பகுதியை மீண்டும் எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள்" என்றார்.* *இதற்குச் சீனா தரப்பிடமிருந்து வந்த பதில்: "நாங்கள் இந்தியாவின் பகுதியை ஆக்கிரமிக்கவில்லை. எங்கள் நாட்டின் பகுதியை 1680ல் இந்தியாவை ஆண்ட பேரரசர் பிடுங்கியதை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டோம்". *இந்த பத...

ஹிஜ்ரி புத்தாண்டு: அறிஞர் கரீம் கனி சிந்தனை!

Image
*நபிகள் நாயகம் (ஸல்) ஹிஜிரி சகாப்தத்தை ஆரம்பித்து ஆயிரத்தி முன்னூற்றி அறுபத்தி எட்டு சந்திர ஆண்டுகள் முடிந்து, *புதிய ஆண்டு பிறக்கின்றது.* *புதிய ஆண்டுக்கு நமது நல்வரவு உரித்தாகுக!* பழையன கழிந்து புதியனபுகும் தினம் வருடப்பிறப்பு தினம் ஆகும். புத்துயிர் பெற்ற உணர்ச்சிகளுடன், திடசித்தத்துடன், புதிய ஏடு போடும் தினம் ஆகும். *காலச் சக்கரம் என்பது அதிசயமான ஒரு பொருள். 24மணி நேரத்தைக்கொண்ட சிறிய சுற்றுதல் உள்ள சக்கரம் உண்டு ஏழு நாளுக்கொரு தடவை சுற்றி முடிக்கும் வாரச் சக்கரமும் உண்டு இருபத்தி ஒன்பதரை நாட்களில் ஒரு சுற்று முடியும் மாதச் சக்கரமும் உண்டு 364நாட்களில் சுற்றி முடியும் ஆண்டுச் சக்கரமும் உண்டு அங்ஙனமே அதை விட பெரிய சகாப்தச் சக்கரமும் உண்டு* *மானிடர் பொதுவாக நாள், வரம், மாதம், ஆண்டு சக்கரத்துடன் நின்றுவிடுவார்கள்*. *அதை விடப் என்ற பெரிய காலச்சக்கரங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் மட்டிலும் கவனிப்பர்கள்.* *ஒரு நாள் என்பது முதல் மனிதராகிய ஆதம் (அலை) காலத்தில் எத்தனை மணி நேரம் கொண்டதாக இருந்ததோ அதே நேரம் கொண்டதாகத்தான் இன்றும் இருக்கிறது. அன்று வாரம் என்பது ஏழு நா...

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Image
மணிப்பூரில் இரு பழங்குடி பெண்கள் சாலையில் நிர்வாணமாக நடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.