Posts

அவதூறு செய்தவர் படுகொலை: தீவிரவாதிகளுக்கு தொடர்பு இல்லை!

இறைத்தூதர் என்று உலக மக்களால் போற்றப்படும் நபிகள் நாயகம் ( ஸல் ) பற்றி அவதூறு கூறிய நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட கண்ணையா லால் என்பவரை இருவர் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இல்லை என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த கொலைக்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சமய நல்லிணக்கத்திற்கு எதிராக சில மதவாத அமைப்புகள், தனி நபர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

சிவசேனா ஆட்சி கவிழ்ந்தது!

மும்பை: சிவசேனாவின் அதிருப்தி எம். எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, வேறு மாநிலத்தில் கடத்திவைத்து இப்போது மகாராஷ்டிராவில் பிஜேபி ஆதரவு ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும் பிஜேபியின் பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். இது ஜனநாயக விரோத செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. முன்னதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் பதவி விலகியதை அடுத்து, இருவரும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்கள்.

ஆஸ்கர் விருது குழுவில் நடிகர் சூர்யா!

பன்னாட்டு விருதான ஆஸ்கர் விருது குழு உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்கர் தேர்வுக்குழுவில் புதிதாக நடிகர்கள், இயக்குநர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இதில் தென்னிந்திய அளவில் தமிழ் திரையுலக நட்சத்திரமான சூர்யா தேர்வானதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திராவிட முன்மாதிரி ஆட்சி பொற்கால ஆட்சியாகும்! -முதல்வர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். அவர் உரையாற்றுகையில், திமுகவின் திராவிட முன்மாதிரி ஆட்சி மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பொற்கால ஆட்சியாக அமையும் என்று குறிப்பிட்டார்!

அமீரகம் சென்று திரும்பினார் பிரதமர் மோடி!

அபுதாபி: ஜெர்மனியில் ஜி-7 மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அமீரக அதிபர் ஷேக் முஹம்மது பின் சையது நஹ்யானை சந்தித்து முன்னாள் அதிபர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். இந்தியாவில் பிஜேபி நிர்வாகிகள் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதால், அரபு நாடுகள் உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதற்கு பதிலாக, அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். அவதூறு கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு துறை விளக்கம் தெரிவித்தது. இப்போது அமீரகம் சென்ற பிரதமர் மோடியிடம் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல், நபிகள் நாயகம் பற்றிய அவதூறு போன்றவை இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

முடிவுகள் அறிவிக்காத அதிமுக நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை: அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தலைமை நிலையத்தில் நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்ந்தெடுப்பது குறித்த முடிவை இன்று அறிவிக்கவில்லை. பழனிசாமி தரப்பு சுறுசுறுப்பாக செயல்படுவதால், மதுரையில் மாஸ் காட்டிய ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை புறப்பட்டு வருகிறார்.

செய்தித் துளிகள்!

* திருவனந்தபுரம்: கேரளாவில் 70 வயது முதிய பெண் ஆரிபா நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு கைகளைக் கட்டியபடி நீந்தி சாதனை படைத்துள்ளார்! * ****இராமநாதபுரம்: புல்லங்குடி கிராமம் முனியராஜ் மகன் ராகுல்கவி ( வயது 16 ) நாணயம் சேகரிப்பு, அஞ்சல்தலை சேகரிப்பு, நூல்கள் சேகரிப்பு ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அஞ்சல் அடடையில் 117 திருக்குறள் எழுதி சாதனை படைத்துள்ளார்.