Posts

Showing posts from April, 2023

கேந்திரிய வித்யாலயா பதவிகளுக்கு தமிழர் புறக்கணிப்பு : சு. வெங்கடேசன் எம்பி கண்டனம்!

Image
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முக்கிய பதவிகளுக்கு தமிழர் ஒருவர் கூட நியமனம் செய்யாத ஒன்றிய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட 957 பேர்களில் ஒரு தமிழர் கூட இல்லை. நியமன முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு உள்ளாக்கும் அப்பட்டமான அநீதி. இந்த தேர்வினை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். குஜராத் தமிழ்நாடு சவுராஷ்ட்ரா சங்கம், காசி தமிழ் சங்கமம் ன்னு ரயில்வச்சி கூட்டிப்போய் ஓட்டுகேப்பாங்க. தமிழ்நாட்டுக்கு வரும்போது திருக்குறளை மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பிப்பாங்க. இங்கிருக்கும் சங்கிகளும் பிரதமருக்கு ஒன்றிய அரசுக்கு தமிழ்மேல ரொம்ப பாசம்ன்னு அளந்து விடுவாங்க. ஆனா வேலைவாய்ப்பெல்லாம் நமக்கு கிடையாது. இன்னுமா இவங்கள நம்புறீங்க.

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க செய்திகள்!

Image

கர்நாடகா : தடைகளைத் தாண்டி முஸ்லிம் மாணவி சாதனை!

Image
*கல்லூரியில் புர்கா அணிய தடை விவகாரத்தில் அல்லாஹூ அக்பர் முழக்கம் மூலம் உலகப் ௭ெற்ற கர்நாடக மாநில மாணவி தபஸூம் ஷேக் கல்வியில் சாதனை படைத்துள்ளார். கர்நாடகப் பல்கலைக்கழகக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட PUC-II தேர்வில் 98.3% சதவீதம் பெற்று முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தபசும் ஷேக்கிற்கு வாழ்த்து குவிந்துவருகிறது. ஹிஜாப் விவகாரத்தில் பல தடைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி தபசும் பெற்ற இந்த வெற்றி பெண்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. தடைகள் பல வரலாம் - தட்டிப்பறிக்கக் கூட்டமும் சில வரலாம், ஆனால் அதைக்கண்டு அஞ்சாமல் துணிந்து நிற்பேன் என்று தேர்வில் சாதித்த தபசும் ஷேக்கின் வெற்றி பலருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது . செய்தி: ஹமீது

12 மணி நேர வேலை திருத்த சட்டம்: ஆம் ஆத்மீ வசீகரன் கண்டனம்!

Image
சென்னை: 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரம் ஆக்கும் தொழிலாளர் விரோத சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருக்கிறது. இது திமுக இத்தனை ஆண்டுக் காலமாகக் கடைபிடித்து வரும் தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கைளுக்கே எதிராக உள்ளது. மேலும் மே தினம் என்பதே தொழிலாளர்களின் வேலைநேரம் எட்டு மணி நேரம் வேலை என்பதை உறுதிப்படுத்திய நாள். தொழிலாளர்களின் இரத்தத்தில் அவர்களின் போராட்டதால் விளைந்த அடையாளம் தான் 8 மணிநேர வேலை. 8 மணிநேர வேலை உரிமையைப் பறிக்கும் வகையில், 12 மணி நேரமாக உயர்த்துவது உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும். இது சர்வாதிகார - முதலாளித்துவ வர்க்கத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும் இச்சட்டத்தால் தொழிலாளர் சமூகம் கூடுதலான உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, இதனை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசை த...

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!

Image
இன்று மாலை பல்வேறு இடங்களில் பிறை தெரிந்ததால் நாளை (22 - 4 - 2023) சனிக்கிழமை தமிழ்நாட்டில் ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி ஸலாஹுதீன் அறிவித்துள்ளார். அனைவருக்கும் ஈதுல் பித்ரு பெருநாள் வாழ்த்துகள்! ஈத் முபாரக்!- ஜே. மீராமைதீன், ஆசிரியர் - இயக்குநர், நமது செய்தி.

பலவீனமானவர்களுக்கு செலவு செய்யுங்கள்!

Image
* சுயமாக சம்பாதிக்க இயலாத பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால் அவர்களுக்குச் செலவு செய்வதற்கு சலிப்படையாதீர்கள். அவர்களால் உங்களுக்கு அல்லாஹ்வின் உதவியும் ரிஜ்கும் கிடைக்கும் என்கிறார்கள் காருண்ய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். நம்முடைய வீட்டில் நிறைய குழந்தைகள் இருக்கலாம். வயதான பெற்றோர்கள் இருக்கலாம். திருமணம் ஆகாத அல்லது கணவனை இழந்த, விவாகரத்து செய்யப்பட்ட மகள்களோ சகோதரிகளோ இருக்கலாம். பலவீனமான மாமனார் - மாமியார் (மனைவியின் பெற்றோர்) ஆதரிப்போர்கள் இன்றி நம்முடன் தங்கியிருக்கலாம். இவர்களுக்குச் செலவு செய்வதைப் பாரமாக கருதாதீர்கள். ஏனென்றால் அவர்களை நீங்கள் பராமரிப்பதால் அவர்களுக்கும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு ரிஸ்க் வழங்குவான். وعن أبي الدرداء عويمر رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ) ابغوني الضعفاء ، فإنما تنصرون وترزقون بضعفائكم (رواه أبو داود நபியவர்கள் சொல்கிறார்கள்: எனக்காக பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். உங்களுக்கு உதவி கிடைப்பதும் ரிஸ்க் வழங்கப்படுவதும் உங்களிடமுள்ள பலவீனமானவர்களால்தான்(அபுதாவூத்) குர்ஆன் கூற...

அன்புளார் எழுக - வருக!

Image
அருளன்பு எங்கும் நிறைக அறமெலாம் பொலிக- வளர்க! இருளெலாம் இங்கிருந் தகல்க! இன்பங்கள் நிறைந்து பெருக! மருளெலாம் மாய்க! தொலைக மயக்கங்கள் எல்லாம் கலைக! அருள்மிகும் ரமலானோடு சித்திரை வருவ தாக... கொடுநோய்கள் மறைவதாக! குறையெலாம் அகல்வதாக! மிடுமைகள் தொலைவதாக! மேன்மைகள் பொலிவதாக! அடிமைகள் கேடர் ஒழிக! அன்புளார் எழுக வருக! கொடுமைகள் நீங்கியிந்த குவலயம் சிறப்பதாக... பாதையில் வெளிச்சம் வருக! பாசிச இருண்மை தொலைக! போதையின் கொடுமை ஒழிக போர்களின் சத்தம் மாய்க! மாதரார் மாண்பு மலர்க! மதப்பகை பூசல் அழிக! ஆதார வாழ்வில் இன்பம் அனைவர்க்கும் இறைவன் அருள்க! இனிய தமிழ் சித்திரை வாழ்த்துக்கள்! * - அத்தாவுல்லா

ஸஹர் விருந்தில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுடன் திருமாவளவன் பங்கேற்பு!

Image
சென்னை: ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி நோன்பு நோற்று வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையில் உள்ள முஸ்லிம்கள் உடன் சஹர் உணவு அருந்தி இஃப்தார் நேரத்தில் நோன்பு திறந்து வருகிறார். ஏறக்குறைய 19 வருடங்களுக்கு மேலாக இதை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த அடிப்படையில் இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளின் நிர்வாகிகள் உடன் சஹர் விருந்தில் திருமாவளவன் கலந்து கொண்டார். அண்மையில், சென்னையில் நடைபெற்ற சஹர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி உடன் சஹர் உணவு விருந்தில் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் பேராசிரியர் சேமுமு. முகமதலி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர் மற்றும் காஞ்சி மாவட்ட செயலாளர் அனஸ் ரஹ்மான், எஸ்டிபிஐ தெஹ்லான் பாக்கவி, மனித நேய மக்கள் கட்சி துணை பொது செயலாளர் தாம்பரம் யாக்கூப், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ரமலான் சிந்தனை : மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு கிடைக்கும் நன்மை!

Image
பொதுவாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்களை நாம் அதிக நன்மை அடைந்தவர்களாக கருதுவோம். *நோன்பு நோற்காமல் மக்களுக்கு சேவை செய்தவர்களை "நன்மையைத் தட்டிச் சென்றவர்கள்" என்று நபி (ஸல்) பாராட்டி அங்கீகரித்துள்ளார். எப்படி? நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அந்த பயணத்தில் வெயில் கடுமையாக இருந்தது. சிலர் நோன்பு நோற்றார்கள், சிலர் நோன்பை விட்டு விட்டார்கள். நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நோன்பை விட்டவர்கள் தான் வாகன (ஒட்டக)ங்களை எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள்; நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். இதை பார்த்த நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்கள். ( புகாரி 2890) *இஸ்லாத்தில் மற்ற மனிதர்களுக்கு சேவை செய்வதும் அதிக நன்மை பெற்று தரும் காரியம் தான்.* *ஆக்கம் : S.சித்தீக் M.Tech*

ரமலான் சிந்தனை : உண்மையாளர்கள் குறித்தும் கேள்வி கேட்கப்படும்!

Image
உண்மையாளர்கள் குறித்து அவர்களின் உண்மை பற்றி கேள்வி கேட்கப்படும்! - திருக்குர்ஆன் *************** நீதிபோதனை: தொகுத்து வழங்கியவர் - ஜே. எஸ். ரிஃபாயி

உலகின் அதிசய இடம்!

Image
*நான் இமாம் அபூ ஹகீம். நான் ஆர்க்டிக் பிரதேசத்திலுள்ள நார்வே என்ற இடத்திலிருந்து பேசுகிறேன். நான் தற்சமயம் தராவீஹ் தொழுகையை முடித்துக்கொண்டு வந்துகொண்டிருக்கிறேன். என்னக்கு பின்னால் இருக்கும் திசையில்தான் மஸ்ஜித் உள்ளது. தாங்கள் பாதி இரவில் சூரியன் உதிக்கும் நாட்டைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இந்த காணொளியில் அதை நான் உங்களுக்கு காட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்குப் பின்னால் தாங்கள் பார்க்கும் சூரியன் பாதி இரவு சூரியன் ஆகும். இங்கு மக்ரிப் உண்டு - ஆனால் சூரியன் அஸ்தமனம் ஆகாது! இங்கு இரவு முழுவதும் சூரியன் எல்லா திசைகளிலும் சுற்றிக்கொண்டு இருக்கும். அதே நேரத்தில் சந்திரனும் வானில் இருக்கும்! இங்கு பகலிலும் சூரியன் இருக்கும்- இரவிலும் சூரியன் இருக்கும். இப்படிப்பட்ட வியப்பான இடத்தை (ஆர்க்டிக் பிரதேசம்) பற்றி அல்லாஹ் சூரத்துல்-கஹஃப் என்ற அத்தியாயத்தில் “துல்கர் நைன்” என்ற மன்னரின் வலிமையை பற்றி குறிப்பிடும்போது, அவர் உலகில் பெரும் பகுதிக்கு தன் படையை எடுத்துச்சென்று பெரும் பகுதிகளை வெல்லும் ஆற்றல் படைத்தவர். மேலும் அவர் இரவையே பார்க்காத மக்கள் வசிக்கும் இடத்துக்கும் தன் படையை ஈட்...

கந்து வட்டியால் பாதிக்கப்படும் ஏழை முஸ்லிம்களுக்கு உதவிடுவீர்!

Image
*இஸ்லாமிய சமூகத்திற்கு மனந்திறந்த ஒரு மடல்...!!* ****************** பேரன்புடையீர்...! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம..)! இஸ்லாமிய சமுதாயத்தில் பலர் தங்களது கணக்கில் வைத்திருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டியை வங்கியில் இருந்து எடுத்து எவ்வித பலனும் தனக்கும் - குடும்பத்தினருக்கும் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு அடிப்படை தேவையான கழிப்பறை கட்டுமானம் செய்திட தருவதையும், தங்களுக்கு தெரிந்த வட்டாரத்தில் இருப்போர் அடகு கடையில் ஏதேனும் நகைகள் அடகு வைத்திருந்தால் அதை மீட்க - அந்த வட்டி பணத்தை - வட்டி கட்டுவதற்கு தருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மேலும் பலர் அந்தப் பணத்தை எடுப்பதே இல்லை, அந்த தொகை அவர்களின் கணக்கில் அப்படியே இருக்கிறது. தனது தொழில் / வேலை இவைகள் சரிவர அமையாத காரணத்தால் கஷ்டப்படும் சூழ்நிலையில் நமது சமூகமும் இருக்கிறது, அவர்கள் தன்னுடைய தேவைகளுக்கும், கவுரவம் - இது மிகவும் அவசியம் என்கிற நடுத்தர குடும்ப மக்களின் கோட்பாட்டிற்கும் ஆட்பட்டு கந்து வட்டி என்ற கொடிய வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். அவ்வாறு மாட்டிக் கொள்பவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் தொடர்ந்து வட்டி கட்டியே தங்களத...