Posts

அபூர்வ தகவல் : பெருக்கு மரம் (பாவோ பாப்)!

Image
பெருக்கமரம், பாவோபாப் என்று சர்வதேச நாடுகளில் அழைக்கப்படுகிறது. இவ்வகை மரங்கள் மடகஸ்கார், ஆப்பிரிக்கா, அரேபியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சொந்தமானவையாக காணப்பட்டாலும் இலங்கைக்கு இம்மரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் அரேபிய வணிகராகும். கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால இலங்கையின் அயல்நாட்டு வாணிபத்தில் அரேபிய வணிகர் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்கள் வணிகத்தின் பொருட்டு இலங்கையில் தங்கியிருந்த கடற்கரை நகரங்கள் துறைமுகங்களில் இம்மரத்தை நாட்டியுள்ளனர். இவ்வரலாற்றுப் பின்னணி கொண்ட இடங்களிலேயே பிற்காலத்தில் போத்துக்கேயர், ஒல்லாந்தர் தமது கோட்டைகளையும் அமைத்தனர். இதற்கு நெடுந்தீவு, மன்னார், காலி முதலான இடங்களில் உள்ள கோட்டைகளும் அவற்றின் அருகேயுள்ள பெருக்கு மரங்களும் சான்றாகும். கி.பி 1630 ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி போர்த்துக்கேயருக்கும் இரண்டாம் ராஜசிங்க மன்னனுக்கும் இடையில் மெனராகலை மாவட்டத்தில் உள்ள வெல்லவாய பகுதியில் யுத்தம் நடைபெற்றது. இதில் இலங்கை முஸ்லிம்களும் அரபிகளும் ஒட்டகத்தில் ஏறி போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். இ...

மாநிலம் தழுவிய போதை ஒழிப்பு பிரச்சாரம்!

Image
சென்னை: பத்திரிகையாளர் மன்றத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் தலைமையில் மாநில செயலாளர் சையது அலி, மற்றும் சென்னை மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேட்டி அளித்தனர். காஞ்சி மாவட்டம் சார்பாக ஜனவரி 22 ம் தேதி பொது சிவில் சட்ட எதிர்ப்பு கூட்டம் நடைபெறும். மேலும் டிசம்பர் முதல் வரும் 2023 பிப்ரவரி இறுதி வரை தமிழகம் தழுவிய மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுவது குறித்தும் விளக்கினர்.

கேரளாவில் நீதிபதியாகும் ஆலிம்!

Image
மௌலவி சி.அப்துர் ராசிக் சுரைஜி.... எம். ஏ., எல். எல். பி., எல். எல். எம். படித்தவர். மார்க்க கல்வியுடன் உலகக்கல்வி இணைந்த பாடத்திட்டத்தின் அவசியத்தை உணர்ந்த கேரள முஸ்லிம்கள், பல்லாண்டுகளுக்கு முன் பெருமுயற்சி செய்தனர். தற்போது அது, பல்வேறு அரசு வேலை வாய்ப்புகளில் பயனளித்து வருகிறது! கண்ணூர் மாவட்டத்தில் கட்டாங்கோடு ஊரைச் சார்ந்த அப்துர் ராசிக், தொடக்க கல்வி முதல் பத்தாம் வகுப்பு வரை மலையாள மீடியத்தில் பயின்றார். இவரின் தந்தை முஹம்மது மரணிக்க, தாயார் ஆமினா இவரை மார்க்க கல்வி பயில அனுப்பி வைத்தார். குற்றியாடி சிராஜுல் ஹுதா அரபிக் கல்லூரியில் +2 உடன் 2005 முதல் 2012வரை மார்க்க கல்வி பயின்று சுரைஜி ஸனது பெற்றார். சிராஜுல் ஹுதா அரபிக் கல்லூரியில் ஏற்பட்ட கல்வித்தாகம், அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கில இலக்கியம், சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ. ஆங்கில இலக்கியமும் தேறினார். காரந்தூர் மர்க்கஸ் சட்டக்கல்லூரியில் சேர்ந்து ஸகாஃபி ஸனதுடன் எல்.எல்.பி முடித்த அப்துர் ராசிக், மீண்டும் திருப்பதி பல்கல...

அரிமா சங்க விருதுகள்!

Image
சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் சேவையை பாராட்டியும், வட்டாரத் தலைவர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கருக்கு விருது வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்கம் 324 ஜெ யூனிட்டி ஆண்டின் முதல் காலாண்டில் சங்கங்கள் ஆற்றிய சீரிய பணிகளை பாராட்டி அங்கீகரிப்பதற்கான கேட் (GAT) காலாண்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு வானகரம் தனகோட்டி அம்மாள் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆளுநர் பி.வி. ரவீந்திரன் தலைமையில் கேட் தலைவர் பி.ஜெயக்கொடி ஏற்பாட்டிலும் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டு மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாணிக்கம், செயலாளர் ஆர்.ஸ்ரீதரன் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்திற்கு சிறந்த சங்கத்திற்கான (கோல்டு) விருதை வழங்க, தலைவர் எம்.அன்சர் ஃபாத்திமாவும் சிறந்த வட்டாரத் தலைவருக்கான விருதை வட்டாரத் தலைவர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில் பன்னாட்டு முன்னாள் இயக்குநர் சம்பத், இளங்கோவன், முதல் நிலை ஆளுநர் பஜேந்திர பாபு, இரண்டாம் நிலை ஆளுநர் ஏ.டி. ரவிச்சந்திரன், முன்னாள் ஆளுநர்கள் டி.துளசிங்கம், சிவக்குமார், சுரேஷ், மாவட்டச் செயலாளர் இரா.ஏ.பாபு, பொருளாளர் சரவணன், மாவட்ட நிர்வாகிகள் மணிசேகர், ராமு, மோகன்...

குனி மனிதரைக் கூன் நிமிர்த்தியவர்!

Image
* கூடாது கூடாது கூடாது கூடாதென்று பாடாய்ப் படுத்திப் பாழ்படுத்தினர்! சமூகத்தை கேடுகள் கிழித்தெறியக் கிளர்ந்தது ஒரு சிங்கம்! * கூடாது கூடாதென்று கூடாரை வென்ற பெருஞ்சித்தர் நம் பெரியார்! * காலணியக் கூடாது - மேலணியக் கூடாது - நூலணியக் கூடாது - கையவிழக் கூடாது - மெய் நிமிரக் கூடாது - நீர் அருந்தக் கூடாது - நேர் வருதல் கூடாது - நூல் படிக்கக் கூடாது - மேலுயரக் கூடாது - கிட்ட வரக் கூடாது - தொட்டுவிடக் கூடாது - பட்டுவிடக் கூடாது - வேலை பெறக் கூடாது - கோவில் வரக் கூடாது - துண்டு தோளேறக் கூடாது - பெண்டிர் முன்னேறக் கூடாது - விதவையர் பூச்சூடக் கூடாது - பொட்டு வைக்கக் கூடாது - மறுமணங்கள் கூடாது - புதுவாழ்வு கூடாது என கூடாதுகளால் வாழ்வு கூடாதிருந்தது... * கனியை விலக்கிற்று ஒரு வேதம் - மனிதரையே விலக்கிற்று இம்மண் பேதம் - வைக்கத்தில் பெரியார் வைத்தார் பாதம் - மிதிபட்டது அம்மண் மட்டுமன்று - அம்மண்ணின் அடிமைத்தனமும்! * வந்ததைக் கண்டனர் - வென்றதைக் கேட்டனர் - இதிகாச ராமசாமி பாதம் பட்டு ஓர் அகலிகை மட்டுமே உய்...

நலத்திட்ட உதவிகள் - பணி ஆணைகள் வழங்கிய அமைச்சர் உதயநிதி!

Image
காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடியில் நலத்திட்ட உதவிகளை ஏழை - நடுத்தர மக்களுக்கு வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன்களும் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் தென்னவன் இல்லம் சென்று நலம் விசாரித்தார். காரைக்குடி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் புதிய திட்டப்பணியை பார்வையிட்டார் புதிய இளம் அமைச்சர் உதயநிதி. முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக காரைக்குடி நகரின் முக்கிய சாலைகளில் திமுக கொடிகள் நடப்பட்டிருந்தன.

காரைக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Image
காரைக்குடி: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று காரைக்குடி வந்த அவர் நாளை ( சனிக்கிழமை ) காலை இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை, இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு பணியை தொடங்கி வைக்கிறார். காரைக்குடி செல்லப்பா வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களை வழங்கிப் பேசுகிறார். அமைச்சராகி முதன் முதலாக வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் செய்துள்ளார்.