Posts

Showing posts from May, 2023

கைத்தடியா? செங்கோலா?

Image
*1947 ல் நம் நாடு சுதந்திரம் அடைந்த போது பிரதமர் நேருவிடம் பலர் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர் . சிலர் பரிசுப் பொருளை அவருக்கு வழங்கினர். *அப்படி நேருவிடம் 14/08/1947 ல் வழங்கப்பட்ட ஐந்து அடி நீளமான ஒரு தங்கக் கைத்தடியைத் தான் இப்போது சோழ மன்னர்களின் செங்கோல் என சங் பரிவார் ஆசாமிகள் புருடா விடத்துவங்கி விட்டனர். *அந்தக் காலத்தில் நேரு அவருக்கு கிடைத்த எல்லா பரிசுப் பொருட்களையும் அரசிடமே ஒப்படைத்து விட்டார் . அவருக்கு தமிழகத்தின் ஒரு ஆதீனத்தைச் சார்ந்தவர்கள் வழங்கிய தங்க கைத்தடியையும் அரசிடமே ஒப்படைத்து விட்டார்.* *அது அலகாபாத் நகரில் ( தற்பொழுது பிரயாக் ராஜ் என பெயர் மாற்றப்பட்டது ) உள்ள நேரு நினைவகத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. அதன் மேல் Walking Stick என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. *எனவே அது ஒரு சாதாரண கைத்தடி . சென்னையில் இருந்த பிரபல நகை வியாபாரிகளான உம்முடியார் சகோதரர்கள் 1947 ஆகஸ்ட் மாதம் தயாரித்த தங்க கைத்தடி எப்படி சோழ பேரரசில் மன்னர்கள் பயன்படுத்திய செங்கோலாக இருக்க முடியும் ? தமிழகத்தில் சோழர்களின் அரசாட்சிக் காலம் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் ( 1200 ஆம் ...

மருத்துவக் கல்லூரிக்கு நிலம் தானமாக வழங்கிய மீரான் சாஹிபு!

Image

வக்பு வாரிய தலைவர் அல் ஹாஜ் அப்துல் ரஹ்மான் சமுதாயப் பணிகள் சிறக்க வாழ்த்துகள்!

Image
மே-28 பிறந்தநாள் காணும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணை தலைவர் "பிறைமேடை" இதழ் நிறுவனர் - ஆசிரியர் எம்.அப்துல்ரகுமான் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் வக்பு வாரியம் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கும் ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை மீட்பதற்கும் முயற்சி எடுத்து வருகிறார். முஸ்லிம் மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் அவர்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்கவும் அவர் அனைத்து நலனும் பெற்று பல்லாண்டு வாழவும் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறோம். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

2000 ரூபாயும் நாகரிக கோமாளியும்!

Image
*இதுவரைக்கும் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 375 கோடி இருக்கும். *ஒரு நோட்டு அச்சடிக்க ஆன செலவு மட்டும் சராசரியாக 4 ரூபாய். ஆக மொத்தம் அச்சடிக்கிற செலவு மட்டும் 1500 கோடி ரூபாய். *இந்த நீளமான நோட்டை ஏடிஎம் மெசின்களில் அடுக்க முடியாததால் மெசின்களை மாற்றியமைக்க வேண்டி இருந்தது. *நாட்டில் ஏடிஎம்கள் எண்ணிக்கை அப்போது சுமார் 2 இலட்சம். *ஒரு ஏடிஎம்மின் விலை சராசரியாக 7 இலட்சம் ரூபாய். மாற்றியமைக்க ஏடிஎம் விலையில் 10% ஆனது என்றால் மொத்த செலவு, கிட்டத்தட்ட 1400 கோடி. *இது போக 15 இலட்சம் பொதுத் துறை, தனியார் துறை வங்கி ஊழியர்களுக்கு பயிற்சிக்கான செலவு, *375 கோடி நோட்டுகளை நாடு முழுக்க லாரிகளில் கொண்டு சென்று விநியோகிக்க ஆன செலவு, எல்லாவற்றையும் சேர்த்தால், *2000 ரூபாய் நோட்டுகளை அவசர கோலத்தில் அறிமுகப்படுத்தி, இப்போது திரும்பப் பெற்ற, மோடியின் கோமாளித் தனத்தினால் ஆன மொத்த தண்ட செலவு 5000 கோடி ரூபாயைத் தாண்டும்! *இது போக கள்ள நோட்டு ஒழிப்பு, கருப்பு பண ஒழிப்பு, மின்னணு வர்த்தகப் பரவலாக்கம் என எல்லா குறிக்கோள்களிலும் முற்று முழுவதுமாகத் தோற்ற, இ...

சுவாமிமலை - சென்னை இடையே அரசு பேருந்து சேவை!

Image
சுவாமிமலை நகரிலிருந்து சென்னைக்கு கும்பகோணம், வடலூர், பண்ருட்டி, திண்டிவனம் வழியாக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சி சுவாமிமலை கீழ வீதியில் நடைபெற்றது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா ஆகியோர் கொடியசைத்து பேருந்து சேவையை தொடக்கி வைத்து பொதுமக்களுடன் பயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் எஸ்.கே. முத்துச்செல்வம், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, அரசு வழக்கறிஞர் பா.விஜயகுமார், சுவாமிமலை பேரூர் திமுக செயலாளர் எஸ்.எம்.எஸ். பாலசுப்பிரமணியன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தலைமை பிரதிநிதி வழக்கறிஞர் சரவணபாண்டியன், மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், மாவட்ட பொருளாளர் பொகர்தீன், சுவாமிமலை பேரூர் தலைவர் புர்க்கான் அலி, மாவட்ட மகளிர் பிரிவு பொருளாளர் ஷபானா மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள், திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளம...

கவிதை : அநாதை!

Image

சென்னை மாநகர பைத்துல் மால்களின் செயற்குழு கூட்டம்!

Image
சென்னை மாநகர பைத்துல் மால்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் 21- 5 - 2023 அன்று ராயபுரத்தில் உள்ள தமிழக மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக எஸ் டி பி ஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் பைத்துல்மால் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இலங்கை இனப்படுகொலை நினைவேந்தல்!

Image
சென்னை: இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் 21 - 5 - 2023 அன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மே,17 இயக்கத்தின் ஒருங்கிணைபில் நடைபெற்றது. இதில் எஸ் டி பி ஐ கட்சி சார்பாக மாநிலப்பொதுச் செயலாளர் அச.உமர் பாரூக், மாநிலச் செயலாளர் A.K.கறீம் ஆகியோர் பங்கேற்றனர். உடன் தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் முகமது சலீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் ரஹ்மான், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் மற்றும் மயிலாப்பூர் தொகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். நிகழ்வில் வைகோ உட்பட தமிழின ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க மாநில மாநாடு!

Image
திருச்சி: மே 18 ம் தேதி திருச்சி LKS மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநில மாநாடு நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து 1500 மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் சமுதாயப்புரவலர்கள், அறிஞர் பெருமக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். வருங்கால சந்ததிகளை சிறந்த தலைமுறையாக உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆலிம்களின் தாய்ச்சபையாம் ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் வாழ்த்துரை வழங்கினார். சமுதாயத்தில் பல தளங்களிலும் சேவை செய்து கொண்டிருக்கும் சமுதாய இயக்கங்களின் பொறுப்பாளர்கள் பலரும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். சட்டத்துறை, ஊடகத்துறை, வேளாண்மை,காவல்துறை போன்ற சில துறைகளைத் தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு கல்விக் கட்டணம் உட்பட அனைத்து அடிப்படை செலவுகளையும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது...

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

Image
மதவெறியர்களை தூக்கி எறிந்த கர்நாடக மக்களுக்கு நன்றி...! வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்...! ஆபரேஷன் லோட்டஸ் எனும் அயோக்கியத்தனத்திற்குள் சிக்கிவிடாமல் இருக்க பெரும் பதற்றத்தில் காங்கிரஸ் தலைவர்களின் நிலை...! கிங் மேக்கர் என கருதப்பட்ட குமாரசாமியின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம்...! முதல்வராக சித்தும்,சிவமும் சண்டையிடாமல் தவிர்ப்பது நன்று...! மொத்தத்தில் பாசிசம் வீழ்ந்துள்ளது. காங்கிரஸ் எழுந்துள்ளது! இனி தக்கவைப்பது காங்கிரஸ் கையில்தான். மீண்டும் ! - அச.உமர் பாரூக்

+2 தேர்வு : மாநிலத்தில் 2 ஆம் இடம்பெற்ற ஸப்ரின் இமானா!

Image
+2 தேர்வு : மாநிலத்தில் 2 ஆம் இடம்பெற்ற சாதனை மாணவி பற்றிய விவரம் வருமாறு: + தேர்வில் முதலிடம் பெற்ற பெண்ணை பற்றிதான் எல்லாருக்கும் தெரியுமே! 600/ 600 எடுத்து சாதனை படைத்தவர். இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்த பெண்ணைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான + 2 தேர்வின் முடிவில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இக்பால் நகர் ஆமினா அம்மாள் தெருவைச் சேர்ந்த பெருந்தரகன் சிராஜ் மகள் மாணவி ஸப்ரின் இமானா 590/ 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாநில அளவில் தமிழ்வழிக் கல்வியில் கணித பாடத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 100 மதிப்பெண்களும் கணித பாடத்தில் 99 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளார். எந்தக் கல்விப் பின்புலமும் இல்லாத சாதாரண எளிய குடும்பத்திலிருந்து கல்வி பயின்ற சாதனைப் பெண் ஸப்ரின் இமானா கடையநல்லூர் கல்வி வரலாற்றில் இதுவரை யாருமே செய்யாத ஒரு புதிய சாதனை மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து. அவரை தமிழ்நாடு ஆளுநர் ரவி, கவர்னர் மளிகைக்...

ஆவடி நாசர் நீக்கம் சரியா? - அச. உமர் பாரூக்

Image
எஸ். டி. பி. ஐ. மாநில பொதுச் செயலாளர் அச. உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கை : திமுகவின் முரட்டு விசுவாசி, ஆவடியின் அடையாளம், தொண்டர்களின் தோழன் என கருதப்படும் ஆவடி நாசர் அமைச்சவையில் இருந்து நீக்கப்படுவதாக தெரிகிறது, அவருக்கும், மஸ்தானுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டதே அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதால்தான். ஆனால் அவர்கள் உண்மையிலேயே முஸ்லிம் சமுதாயத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்களா? என்றால் இல்லவே இல்லை. அவர்கள் முஸ்லிம் என்பதைவிட திமுக தலைவர்களை மார்க்கம் மறந்து கொண்டாடக்கூடியவர்கள். இதனால் பல நேரங்களில் சமூகத்தின் வெறுப்பையும் கண்டும் காணாமல் கடந்தவர்கள் என்பது வேறு கதை, இருக்கட்டும் அது அவர்களுக்கும் அவர்களைப் படைத்த இறைவனுக்குமானது. சரி இப்போது அவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன ? நிர்வாகம் சரி இல்லையா ? ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஏதும் உள்ளனவா ? அல்லது தலைமையின் கட்டுப்பாட்டை மீறிவிட்டாரா ? அதனால்தான் இந்த நீக்கமா ? மேலே சொன்ன எதுவாக இருந்தாலும் நாம் இல்லை, இருக்காது, என்று சொல்லமாட்டோம், அவை நடந்திருக்க ...

மூத்த பத்திரிகையாளர்களுக்கு உதவி : சென்னை பிரஸ் கிளப் அறிவிப்பு!

Image
உதவி தேவைப்படும் வயது முதிர்ந்த பத்திரிகையாளர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் ( பிரஸ் கிளப் ) அறிவித்துள்ளது.

கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய இந்து அமைப்பு கோரிக்கை!

Image
கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று அனைத்து இந்து சமய கோயில்கள் நலச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதழியல் செய்திகள்!

Image
இதழாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.