Posts

Showing posts from June, 2023

புதிய தலைமை செயலாளர் பதவி ஏற்றார்!

Image
சென்னை: புதிய தலைமைச் செயலாளராக ஐ ஏ எஸ் அதிகாரி சிவதாஸ் மீனா நேற்று பொறுப்பு ஏற்றார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் தமிழகத்தில் பல்வேறு முக்கியப் பதவிகளை வாகித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் விடைபெறும் தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்று அவருக்கு பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்தினார். முன்னதாக சிறப்பாக பணியாற்றிய இறையன்புக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

Image
* மக்க மாநகரில் கஅபா எனும் உலகின் முதல் இறையில்லத்தில் பல்வேறு நாடுகள் - பல்வேறு நிறங்கள் - பல்வேறு மொழிகள் கொண்ட உலக மக்கள் ஒன்றுகூடி வழிபடும் சகோதரத்துவ மாநாடு ஹஜ்! * பல்லாண்டு தவமிருந்து பெற்ற மகனை - இறைக் கட்டளையை ஏற்று பலி கொடுக்க முனைந்த தியாக உணர்வு! ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்து ஆடு மாடு முதலான பிராணிகளைக் குர்பானி கொடுக்கும் தியாகம் போற்றும் நாள்! இறைவனுக்காக உடல் - பொருள் - உயிர் கொடுக்க முடியாவிட்டாலும் கோபம் - வெறுப்பு - விரோதம் நீக்கி பிறர்க்கு சின்னச் சின்ன உதவிகளேனும் செய்து வாழ்வோம்! உலக அமைதி - சகோதரத்துவம் பேணுவோம்! அனைவருக்கும் ஈதுல் அள்ஹா - தியாகத் திருநாள் வாழ்த்துகள்! * - ஜே. மீராமைதீன், மூத்த இதழாளர்.

அபூர்வ ஒளிப்படம்!

Image
மறைந்த முதுபெரும் தலைவர் பனாத்வாலா சாஹிப் உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் குஞ்சாலிக் குட்டி, தளபதி மவ்லானா ஷபீக்குர் ரஹ்மான் ரியாஜி, கேரள மாநில தலைவர் பாணக்காடு ஷிஹாப் தங்கள், அப்துஸ் சமத் சமதானி எம்பி மற்றும் பிரமுகர்கள். ** ஒளிப்படம் உதவி: அஹமது தளபதி

மூத்த மார்க்க அறிஞர்களுக்கு விருது - பொற்கிழி!

Image
மதுரை: மூத்த மார்க்க அறிஞர்களுக்கு ஜமாஅத்துல் உலமா சார்பில் பொற்கிழி மற்றும் விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் இறைவன் அழைப்பை ஏற்ற கூத்தாநல்லூர் 'கலீஃபத்துஷ் ஷாதுலி' K.M. பஷீர் அஹ்மது உலவி ஹஜ்ரத் நினைவுகூரப்பட்டார். முதுபெரும் ஆலிம்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி கடந்த 16/8/2021 அன்று தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக மதுரை தலைமையகத்தில் நடைபெற்றது. எழுபத்தைந்து வயதைக்கடந்த உலமாக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது, பொன்னாடை, பொற்கிழி ரூபாய் ஒரு லட்சம் ஆகியன வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் வட்டாரம் சார்பாக உடல்நிலை காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையிலிருந்த கூத்தாநல்லூர் மன்பஉல் உலா அரபிக் கல்லூரியின் நாஜிர் & கலீஃபதுஷ் ஷாதுலி மௌலானா பஷீர் அஹ்மது அவர்களை மாநில பொருளாளர் தலைமையில் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் 20.08.2021 வெள்ளி அன்று நேரில் இல்லத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து விருது மற்றும் பொற்கிழியை வழங்கினார்கள். பொற்கிழியை பெற்றுக்கொண்ட பஷீர் அஹ்மது ஹஜ்ரத் மிகவும் மனமகிழ்ந்து துஆச்செய்ததுடன் தன் ...

முஸ்லிம் லீக் மீராசா காலமானார்!

Image
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய முன்னாள் மேலாளர் - மூத்த இதழாளர் ஏர்வாடி மீரா சாகிப் ( வயது 87 ) காலமானார். சென்னையில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முதல் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது, முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வரை தலைவர்களுடன் நீண்ட நெடிய காலம் முஸ்லிம் லீக் இயக்கத்தில் பணியாற்றியவர். மணிச்சுடர் நாளிதழிலும் தமது பணியைத் தொடர்ந்தார். வயது மூப்பு, உடல் நலக் குறைவு காரணமாக பணி ஓய்வு பெற்ற பிறகு திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் வசித்து வந்த K.M.G.M.மீரா சாஹிப் 21.6.2023 அன்று இரவு 9.50 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே. எம். காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் பேராசிரியர் சேமுமு. முகமதலி, மூத்த இதழாளர் ஜே. மீராமைதீன் மற்றும் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் 22.6.2023 வியாழக்கிழமை ஏர்வாடி கீழ முஹல்லம் பள்ளிவாசல் கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்ல...

ஓட்டுநர் உயிரைக் காப்பாற்றிய உதவி ஆய்வாளர்!

Image
சென்னை பூந்தமல்லி-திருவொற்றியூர் மாநகரப் பேருந்தை (தடம் எண் -101) ஏழுமலை என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்து, நியூ ஆவடி சாலை சந்திப்பை தொட்டபோது, எதிர்பாரா விதமாக ஏழுமலை மயக்க நிலைக்குப் போனார். அந்த நிலையிலும் விபத்து நிகழ்ந்து விடாமல், பேருந்தை பாதுகாப்பாக ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார் ஏழுமலை! அதேநேரத்தில், அந்தப் பகுதி ரோந்துக் காவலில் இருந்த போலீஸ் உதவி ஆய்வாளர் யஹியா, போலீஸ் ரோந்து ஜீப்பில், ஓட்டுநர் ஏழுமலையை ஏற்றிக் கொண்டு சைரனை ஒலிக்க விட்டு, அரசு கே.எம்.சி. மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ”இனி ஆபத்து ஏதும் இல்லை, குறித்த நேரத்தில் கொண்டுவந்து சேர்த்து விட்டீர்கள்!” என்று மருத்துவர்கள், மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கோல்டன் ஹவர்ஸ் என்கிற உயிர்காக்கும் நேரத்தை யஹியா சரியாய்ப் பயன்படுத்தியதால் அரசு பேருந்து ஓட்டுனர் ஏழுமலை மறுவாழ்வு பெற்றிருக்கிறார். தக்க நேரத்தில் உதவி செய்த உதவி ஆய்வாளர் யஹயாவுக்கு பாராட்டு குவிகிறது. .

சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கும் விழா!

Image
சென்னை : எஸ். டி. பி. ஐ கட்சி சார்பில் சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கும் விழா வரும் 24 - 6 - 2023 அன்று நடைபெறுகிறது.

பாசிச எதிர்ப்பில் உங்களுடன் நிற்கிறோம்!

Image
நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்! மனக்குறைகள் இருந்தாலும் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்! * நாங்கள் மனமகிழவில்லை எத்தனையோ கேள்விகளும், ஏக்கங்களும் எம்மிடம் உண்டு... என்றாலும் நாங்கள் உங்கள் பக்கமே, ஊழல் ஊதுகுழலாக இல்லை- பாசிச எதிர்ப்பின் பங்காளர்களாக நாங்கள் உங்கள் பக்கமே! * சிறையில் வாடும் எம் சமூகம் நிர்கதியாய் நிற்கிறதே எனும் கவலைகள் ஒருபுறம் இருப்பினும் செந்தில் பாலாஜியை சிறைபிடித்த விதம் எங்களை கவலையுறவே செய்கிறது * ஒன்றிய அரசின் ஏஜென்சிகளால் முஸ்லிம் சமூகம் சூறையாடப்படும் போது நீங்கள் கண்டுகொள்ளாமல் கடந்துபோனது கூட எங்களுக்கு வலிதான்... அதைவிட பெரியவலி என் ஐ ஏ எனும் ஆட்தூக்கி அமைப்பிற்கு அளவிலா அதிகாரம் தர ஆதரவு தந்த உங்கள் மீது அதிருப்திதான்! * இப்போது அதே என் ஐ ஏ தான் தமிழக காவல்துறையையே பொருட்படுத்தாமல் சூப்பர் போலீசாக மாறி மாநில அரசின் சுயமரியாதையை காற்றில் பறக்கவிடுகிறதே எனும்போது எங்களால் உங்களைப்போல கடந்து போகமுடியவில்லை தான்! எனவே நாங்கள் மாநில அரசுடன் நிற்கிறோம்! மோடி அரசு அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை பழிதீர்க்கும் போது நாங்களும்...

கலைஞர் ஒரு கலங்கரை விளக்கம்! - ஜே. மீராமைதீன்

Image
இனிய திசைகள் ஜூன் இதழில் நமது கட்டுரை!

அமலாக்கத்துறை அத்துமீறல் : அமைச்சர் செந்தில் பாலாஜி கைது - மருத்துவமனையில் அனுமதி!

Image
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக தலைவர் அழகிரி, வி சி க தலைவர் திருமாவளவன், மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நெஞ்சு வலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மாநில அரசின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டுள்ளது பிரதமர் மோடியின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது. அதிகார துஷ்பிரயோகம் செய்யும் உள் துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழ்நிலை குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். *அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவருக்குமான...

ஏழைப் பெண்கள் வாழ்வில் வசந்தம்!

Image

நூல் அறிமுகம் : உலகப் புகழ்பெற்ற பிக்ஹு ஸுன்னா

Image
உலகப் புகழ்பெற்ற ஃபிக்ஹுஸ் ஸுன்னா (இஸ்லாமியச் சட்டக் கருவூலம்) ***************************** (தூய்மை, தொழுகை, ஜகாத் - நோன்பு - இஃதிகாஃப், ஜனாஸா - திக்ர் - துஆ - பயணம், ஹஜ் - உம்ரா, திருமணம், மணவிலக்கு, குற்றவியல் தண்டனைகள், ஜிஹாத் - சத்தியங்கள் - நேர்ச்சை, வணிகம் - வட்டி - வாடகை - ஹவாலா - இரவல் - கண்டெடுத்த பொருள், உணவின் சட்டங்கள் - உள்ஹிய்யா (குர்பானி) - அகீகா - காப்பீட்டு நிறுவனங்கள், ஆடை அணிகலன்கள் - அறக்கொடை (வக்ஃப்) - மரண சாசனம் - பாகப்பிரிவினை) 12 தொகுதிகளாக... அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் அவர்களின் ஏறக்குறைய 20 ஆண்டு உழைப்பே இந்நூல்... அறிஞர்களால் மட்டுமே புரிந்துகொள்ளும் வண்ணம் இருந்த இஸ்லாமியச் சட்டக் கலையை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் மாற்றிய பெருமை நூலாசிரியரையே சாரும். தொடர்புக்கு : 86680 57596 www.iftchennai.in

ஏழைப் பெண்களுக்கு திருமண நிகழ்ச்சி!

Image
சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் சார்பில் ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் 12 - 6 - 2023 அன்று நடைபெறுகிறது.

பிரபல யூனானி மருத்துவர் பத்மஸ்ரீ சையத் கலீபத்துல்லா மறைவு!

Image
யூனானி மருத்துவ மேதை ஹக்கீம் சையது கலீஃபத்துல்லா ( வயது 85 ) 06-06-2023 அன்று காலமானார். அவரது உடல் சென்னை இராயப்பேட்டை ஜானிஜான்கான் சாலையில் உள்ள* எஸ்.கே யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கடந்த 1938-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பிறந்த இவர், பாரம்பரிய முறையில் யுனானி கல்வி பயின்று சென்னையில் யூனானி மருத்துவப் பயிற்சியைத் தொடங்கினார். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடந்த 60 ஆண்களுக்கும் மேலாக மருத்துவராக, நண்பராக, தன்னலமற்ற சமூக ஆர்வலராக சேவை ஆற்றி முத்திரை பதித்தவர். கடந்த 1985 ஆம் ஆண்டில், யுனானி மருத்துவ முறையை ஊக்குவிப்பதற்காக புகழ்பெற்ற யுனானி மருத்துவர் ஹக்கீம் சையத் நியாமத்துல்லா நினைவாக நியாமத் சயின்ஸ் அகாடமி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை அவர் நிறுவினார். சையத் கலிஃபத்துல்லா, யுனானி மருத்துவம் குறித்து பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், சிகிச்சைக...

கவிக்கோ நினைவேந்தல்!

Image
நினைத்து, நினைத்து பூரித்துப்போகிறேன், நின் கவி வரிகளை பார்த்து...! * நீர் நிதானமாய் வடித்த வரிகள் அனைத்தும் நீ தானமாய் விட்டுச்சென்றவைகளே! நீ தடுமாறவும் இல்லை, தடம் மாறவும் இல்லை, அதனால்தான் நீ போற்றப்படுகிறாய்! * தமிழ் வாழும் வரை, தரணி உள்ளவரை, உனது பேனா சிந்திய பேரின்ப அமுதை தமிழுலகம் சுவைத்துக்கொண்டேதான் இருக்கும்! * கவியே,கவிக்கோவே, வாழ்க நின் புகழ்...! * - அச.உமர் பாரூக்