Posts

Showing posts from March, 2023

வக்பு வாரிய தலைவர் பற்றி அவதூறு பரப்பியவர் மீது சட்ட நடவடிக்கை!

Image
சென்னை: சமுதாயச் சேவை ஆற்றி வரும் வக்பு வாரிய தலைவர் - முன்னாள் எம்பி அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் பற்றி அவதூறு செய்தி பரப்பியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "வக்பு சேர்மனை உடனடியாக நீக்க கோரி" என்ற தலைப்பில் பி. நவ்ஷாத் அலி, திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர், பொள்ளாச்சி . என்ற பெயரில் வலைதளங்களில் வேகமாக ஒரு செய்தி பரவியது. இதனை மறுத்து கோவை தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சஹர் பானு பைஜில் எழுத்து மூலமும், பேட்டி மூலமும் விளக்கமளித்து அந்த போலி நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளார். இதற்கிடையில் இப்படி ஒரு மோசடியான மனுவை தயாரித்து அனுப்பியது ஓமன் நாட்டில் அரசு துறையில் பயோ மெடிக்கல் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து தற்போது ஊர் வந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சார்ந்த முகமது அனஸ் என தெரிய வந்துள்ளதாம். தக்கலை ஞானமா மேதை பீர் முகம்மது ஒலியுல்லா தர்காவிற்கு ஹாஜி ஹசன் தலைமையில் 11 பேர் கமிட்டி தமிழ்நாடு வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளதாம். இந்த கமிட்டிக்கு பெரும் இடையூறாக ஜாஹிர் அலி என்பவர் இருப்பதாகவும்...

இதழியல் துறையினர் திறன் மேம்பாட்டு பயிற்சி!

Image
சென்னை: பத்திரிகையாளர்கள் தங்களின் துறை சார்ந்த தொழிற்தகுதியினை மேம்படுத்திக் கொள்வதற்கும், திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் சிறந்த விளங்கவும் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.* *இப்பயிற்சி, நீதித் துறை, காவல் துறை, அரசியல் துறை, பத்திரிகை துறை, உள்ளிட்ட துறைகளை சார்ந்த மூத்த வல்லுநர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை கொண்டு அளிக்கப்படுகிறது.* *சென்னை, கலைவாணர் அரங்கில் 28.03.2023 செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணி முதல் நண்பகல் 01.30 மணி வரை நடைபெறுகிறது. *இச்சிறப்பு பயிற்சியில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள், செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொள்கிறார்கள். * தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக செய்தி வெளியீட்டு பிரிவு மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்ச் செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார். தகவல்: ஹமீது **************** சவூதி சாலை விபத்து: 20 பேர் பல...

பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

Image
எம்பி பதவியைப் பறித்து இந்தியாவின் பெரும் இயக்கமான காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியையே முடக்கும் அளவுக்கு பாசிசவாதிகள் சதி செய்து வருகிறார்கள். இப்போதாவது புரிகிறதா ? பாசிச ஆர். எஸ். எஸ்.சும், பா.ஜ.க.வும், முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரி அல்ல , அது மனித குலத்திற்கும் சமத்துவம், ஜனநாயகம்,சமநீதி, சகோதரத்துவம், மதச்சார்பின்மை என எல்லாவற்றிற்கும் எதிரானதுதான் என்று...! முஸ்லிம் சமூகம் குறிவைத்து ஒடுக்கப்படும்போது பாராமுகமாக கடந்துபோனவர்களே, இப்போது தெரிகிறதா ? வலியும் வேதனையும் என்னவென்று ? ஒரு மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் எவ்வளவு சர்வ சாதாரணமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரு மதசார்பற்ற மண்ணில் மதவெறி எந்த அளவிற்கு தலைவிரித்தாடுகிறது? யாருக்கோதானே நடக்கிறது, நமக்கென்ன என இருந்ததின் விளைவு இப்போது ஊருக்கே என மாறும்போது வலிக்கிறதல்லவா ? செய்யவேண்டிய நேரத்தில் செய்யவேண்டியதை செய்யத் தவறியவர்களால் இன்று அவர்கள் தலையிலேயே இடி விழுகிறது. இனியேனும் விழித்துக்கொண்டால் அனைவருக்கும் நன்று என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை! * - அச.உமர் பாரூக்

ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு : காங்கிரஸ் மேல்முறையீடு!

Image
புதுடெல்லி: அடுத்த பிரதமர் என்று கருதப்படும் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, மோடி சமூகம் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று கூறி குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை சாக்காக வைத்து ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது - இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. கருத்துச் சுதந்திரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. ராகுல் காந்தி மீதான புகார் வழக்கில் வேகமாக தீர்ப்பு வழங்கிய குஜராத் நீதிமன்றம், குஜராத் கலவரத்தில் பல்லாயிரம் சிறுபான்மையினர் பலி கொடுக்கப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அன்றைய முதலமைச்சர் - இன்றைய பிரதமர் மோடிக்கு எதிராக எந்த தீர்ப்பும் - தண்டனையும் வழங்கவில்லை. மாறாக அவரை வழக்குகளில் இருந்து விடுவித்தது ஏன் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்த தீர்ப்பையும் எம்பி பதவி தகுதி நீக்கத்தையும் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்பட எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின், டெல்லி முதல்வர் அர...

ஆளுநர் ரவி திரும்பப் பெறப்பட வேண்டும்! - ஆம் ஆத்மீ வசீகரன்

Image
சென்னை: தமிழ்நாடு ஆம் ஆத்மீ தலைவர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு முழுமையான தடை ஏற்பட வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும். காரணம் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் என பல தரப்பினரின் வாழ்வானது சீரழிகிறது. குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட பலர் உயிரை மாய்த்துக்கொண்டனர் என்பது அறிந்ததே. இணைய வழியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடுவதால் பணத்தை இழந்து, மனம் நொந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டதால் பல குடும்பங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலை தொடரக்கூடாது என்றால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முழுமையான தடை தேவை. ஆன்லைன் சூதாட்டங்களை வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் இம்மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காதது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இப்பொழுது தமிழக சட்டப்பேரவையில் 2 வது முறையாக ஆன்லைன்...

பேரா. முனைவர் சேமுமு முகமதலி ரமலான் வாழ்த்து! நூல் அறிமுகம்!

Image
நூல் அறிமுகம்: *அலங்கரிப்போம் ரமளானை!* - ஐ எப் டி புதிய வெளியீடு ----------------------------------- இன்றைய சூழ்நிலையில் ரமளான் நோன்பு ஓர் சடங்காக, ஒரு ஆரவார விழாவாக அமைந்து விட்டதோ என்ற சந்தேகம் எழும்புவதால் அதை கோடிட்டு காட்டும் விதமாக ‘ரஹ்மானை வணங்காமல் ரமளானை வணங்கியதால்தான் ரமளான் முடிந்ததும் ஒரு மாதத்துடன் முடித்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வராமல் இருந்து விட்டார்களோ’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி அதற்கு தீர்வையும் நூலாசிரியர் அளித்துள்ளார். மறுமையில் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல காரணமாக இருப்பவை எவை? இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் இறையில்லத்தில் தங்கும் இஃதிகாஃபின் நன்மைகள் என்ன? பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் மாதமாக ரமளான் திகழ்வதால் கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி? என்பவைகளை சிறப்பாக நூலாசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி எடுத்து வைத்துள்ளார். Buy Now: https://bit.ly/3LFUXmS Coupon Code: *RAMADAN100* 8668057596

பத்திரிகையாளர்களின் கோரிக்கை கருத்தரங்கம்!

Image
சென்னை: தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( டி யூ ஜே ) ஒருங்கிணைக்கும் பத்திரிகையாளர்களின் மாநில அளவிலான கோரிக்கை கருத்தரங்கம் அதன் தலைவர் தோழர் புருஷோத்தமன் தலைமையில் நாளை (22-3-2023) சென்னையில் நடைபெறுகிறது. இதில் பொதுச் செயலாளர் முத்து, ரங்கராஜன், பிரஸ் கிளப் பாரதி தமிழன், 'அறம்' சாவித்திரி கண்ணன், சகாயராஜ் மற்றும் பிரமுகர்கள் கருத்துரை வழங்குகிறார்கள். டேவிட், ஷாகுல் ஹமீது, ஜாபர் உள்ளிட்ட நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் பங்கேற்கிறார்கள்.

நூல் அறிமுகம்! செய்தித் துளிகள்!

Image

தழைக்குமா ஜனநாயகம்? - ஜே. மீராமைதீன்

Image
இனிய திசைகள் ( மார்ச் 2023 ) மாத இதழில் மூத்த இதழாளர் ஜே. மீராமைதீன் எழுதியகட்டுரை!

பரங்கிப்பேட்டை அரசு டவுன் காஜிக்கு பாராட்டு நிகழ்ச்சி!

Image
பரங்கிப்பேட்டை அரசு டவுன் காஜியாக கடலூர் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்டுள்ள பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் மேனாள் செயலாளர் மவ்லவி ஹாஃபிழ் ஏ. லியாகத் அலி மன்பயீ அவர்களுக்கு பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 16.03.2023 அன்று காலை குத்பு முஹ்யத்தீன் (புதுப்பள்ளி) ஜும்ஆ பள்ளிவாசலில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை கவுரவ தலைவர் எம்.எஸ். காஜா மொய்னுதீன் மிஸ்பாஹி தலைமையில், சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் எம். அப்துல் காதர் மரைக்காயர் உமரீ முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டையின் பெரும்பாலான உலமாக்கள் பங்கேற்றனர். அரசு டவுன் காஜி லியாகத் அலி மன்பயீ ஹஜ்ரத்துக்கு சால்வை அணிவித்து அவரின் சேவைகள் சிறப்பாக தொடர அனைவரும் வாழ்த்தி துஆ செய்தனர். அத்துடன் 50 ஆண்டுகளாக மார்க்கச் சேவையாற்றி, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் விருது பெற்ற அப்துல் காதர் மரைக்காயர் உமரீ ஹஜ்ரத்துக்கும் சால்வை அணிவிக்கப்பட்டு வாழ்த்துரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரங்கிப்பேட்டை நகர...

கத்தரில் வேலை வாய்ப்பு!

Image
தோஹா: கத்தரில் உள்ள இந்திய தூதரகத்தில் மூத்த மொழிபெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான அறிவிப்பை தூதரகம் அதிகாரப்பூர்வ பக்கத்தில் 14/03/23 அன்று வெளியிட்டுள்ளது. மேலும் நிரந்தர வேலை இது என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்து சலுகைகளையும் சேர்த்து மாதம் 10,000 ரியால் சம்பளம் வழங்கப்படும். அடிப்படை தகுதி: அரபு பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம். மேலும் அரபு மற்றும் ஆங்கிலம் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அரபியை ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து அரபியிலும் மொழிபெயர்க்கும் திறனும் விரும்பத்தக்கது. கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 28 பிப்ரவரி 2023 இன் அடிப்படையில் வயது கணக்கிடப்படும். மார்ச் 2023 இல் செல்லுபடியாகும் கத்தர் விசா கைவசம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். * விண்ணப்பத்தை பிப்ரவரி 24க்கு முன் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்ப...

தமிழ்நாடு முதல்வருக்கு முஸ்லிம் சமுதாயம் கோரிக்கை!

Image
சென்னை: தமிழகத்தில் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ். டி. பி. ஐ. பொதுச் செயலாளர் அ. ச. உமர் பாரூக் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : நீதியரசர் ஆதிநாதன் குழு இயங்கியதற்கான எந்த தடயமும் தென்படாத நிலையில், ஆணையத்தின் பரிந்துரை பெறப்பட்டதாக முஸ்லிம் லீக் மாநாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். அந்தப் பரிந்துரையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை முதலில் வெளியிட வேண்டும். மேலும் இந்த முஸ்லிம் சிறைவசிகள் உள்ளிட்ட அப்பாவி சிறைவாசிகள் விடுதலை குறித்த பரிந்துரையை ( முதல்வர் ) உங்களால் உங்களுக்கான அதிகாரத்தில் நடைமுறைப் படுத்துங்கள். அல்லது முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய இயலாது என வெளிப்படையாக அறிவியுங்கள். அதை விட்டு விட்டு இதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும் என்ற அறிவிப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநருக்கு அனுப்பப்படும் எந்த கோப்பும் கிடப்பில் போடப்படுவதை நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டு இதையும் அவரிடமே அனுப்பப்போகிறேன் என்பது வினோதமா...

நூல் அறிமுகம்: இஸ்லாமிய வரலாறு!

Image
*இஸ்லாமிய வரலாறு* (அபிசீனியா முதல் உஹத் வரை) - முஹம்மது சித்திக்* நபிகளாரின் வரலாற்றை பல்வேறு இடத்திலிருந்து பலரும் எழுதியுள்ளனர். ஆனால் இப்புத்தகம் அதிலிருந்து ஒருபகுதியாக நபிகளாரின் வாழ்வினில் நடந்த முக்கிய நிகழ்வையொட்டி எழுதப்பட்டுள்ளது. நபிகளாரின் வாழ்வினில் நடந்த முக்கிய நிகழ்வுகளான அபீசினியா ஹிஜ்ரத், விண்ணுலகப் பயணம், யத்ரிப்பை (மதினாவை) நோக்கி, மதீனாவில் இஸ்லாம், நபிகளாரின் ஹிஜ்ரத், மாநபியின் மதீனா வருகை, மதீனாவில் இஸ்லாமிய அரசு, உயர்ந்தெழுந்த மஸ்ஜிதுந் நபவி, சகோதரத்துவ உறவு ஒப்பந்தம், போர்களும் காரணங்களும் - போர்களின் நோக்கமும், நபிகளாரின் வியூகமும், கிப்லா (ஜெருசலத்திலிருந்து மக்காவிற்கு) மாற்றம், வணிகக் குழு - பத்ரு களம், பத்ரு போரும் - கைதிகளும், போருக்குப் பின், தடைகளைத் தாண்டிய பயணம், உஹத் போர் - அது தந்த படிப்பினைகள் என *இஸ்லாமிய வரலாறு* அது கடந்து வந்த பாதையை பல வழிகளில் நின்று நம் கண் முன்னால் வந்து படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல். விலை : 170₹ *Unique books* *தொடர்புக்கு : Call / WhatsApp / TeleGram / Signal : *91...

விபத்து: ஜஃபர் அலி வாஹிதி மருத்துவமனையில் சிகிச்சை!

Image
ஈரோடு: சமீபத்தில் விபத்திற்குள்ளான ஜமாஅத்துல் உலமா ஈரோடு மாவட்ட பொருளாளர் ஜஃபர் அலி வாஹிதி, ஈரோடு சுதா ம௫த்துவமனையில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வ௫கிறார். அவரை மாநில தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி சந்தித்து துஆ செய்தார். விபத்தில் மனைவி மரணம் அடைந்த செய்தி சொல்லப்படவில்லை.அவருக்கு ஒ௫ ஆப்ரேஷன் நடந்தது. இன்னும் சில ஆபரேஷன்கள் செய்ய வேண்டியள்ளது. அவரது இ௫ மகன்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடும் சோதனைக்குள்ளான அவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ** தகவல்: எம். எம். மதனி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாடு ஆலோசனைக் கூட்டம்!

Image
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா அகில இந்திய மாநாடு சென்னையில் வரும் 8,9,10 தேதிகளில் நடைபெற உள்ளது. இது குறித்த ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கவும், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களை பார்வையிடவும் சென்னைக்கு வருகை புரிந்துள்ள தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலி குட்டி சாஹிப், தேசிய அமைப்புச் செயலாளர் ஈ.டி.முஹம்மது பஷீர் சாஹிப் எம். பி. ஆகியோரை தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில துணைச் செயலாளர் இப்ராஹீம் மக்கி, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ. எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி, தென் சென்னை மாவட்ட தலைவர் மடுவை பீர் முஹம்மது அபூபக்கர், அரபாத் ஆகியோர் வரவேற்றனர். * செய்தி : தளபதி அஹமது

பிஜேபியை வீழ்த்த இந்திய அளவில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவோம்! - மு. க. ஸ்டாலின்

Image
சென்னை: முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக் கூட்டம் இன்று ( 1 - 3 - 2023 ) சென்னையில் நடைபெற்றது. இதில் நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அதில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசுகையில், நாட்டின் பன்முகத்தன்மையையும் மக்களின் ஒற்றுமையையும் காக்க பா.ஜ.க. வை வீழ்த்த தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போல் இந்திய அளவில் அனைவரும் ஒன்றினைவோம். இப்போதே நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக உழைக்கத் தொடங்குங்கள். நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்று சூளுரைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்...