Posts

Showing posts from October, 2022

இந்து - முஸ்லிம் சகோதரத்துவம்!

Image
அக்பர் சிறுவயதில் ராஜபுத்திரர்களுடன் கொண்ட நட்பு அவரை ஜோதாபாய் என்ற ராஜபுத்திர இந்து பெண்ணை திருமணம் செய்யத் தூண்டுகிறது. இந்தத் இந்துத்தாய் பெற்றெடுத்த மகனே ஜஹாங்கிர். அவரின் மகனே ஷாஜஹான். ஷாஜஹானின் மகன் அவுரங்கஜேப். இப்போது அவுரங்கஜேபின் கொள்ளுப்பாட்டி இந்து. இந்தியர், ராஜபுத்திரர். அவுரங்கஜேப் இந்து முஸ்லிம் சகோதரத்துவ வழித்தோன்றல்... ரத்தத்தின் ரத்தம்! கொள்கையால் இஸ்லாமியர். ஆனால், அவர் இந்தியரே... ராஜபுத்திர முகலாயர்களின் நல்லுறவின் அடையாளச் சின்னமே ஷாஜஹான், அவுரங்கஜேப் எல்லாரும்! ஆனால், இதை சகிக்க முடியாதவர்கள் உருவாக்கிய பிம்பமே இந்து விரோதியாக அவுரங்கஜேபை முன்னிறுத்துவது! இதற்கு நேரெதிர் துருவம் சிவாஜி. ஆதில் ஷா படையில் முக்கிய பொறுப்பில் இருந்த இந்து படைவீரன் குழந்தையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். ஆதில்ஷா, ஒரு குறிப்பிட்ட தர்காவில் ஒரு மண்டலம் கணவனும் மனைவியும் தங்கி தான தர்மங்கள் செய்து வேண்டினால் நல்லது நடக்கும் என்று பரிந்துரைக்க அதன்படி செய்து அவர் அவ்வாறு வேண்டியதன் பலனாக குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்கு அந்த தர்காவில் அடக்கப்பட்ட இஸ்லாமிய துறவியின் ப...

கோவை சம்பவம்: விபத்து குண்டு வெடிப்பாக மாறியது எப்படி?

Image
கோயம்புத்தூர் சம்பவத்தை பற்றி இன்று விரிவாக பேசுகிறேன் .... இஸ்லாமியர்களே எவனாவது உங்கள் ஒட்டு மொத்த சமூகத்தையே இதில் தொடர்பு படுத்தி, அவதூறாக பேசினால் அவர்களை... நாங்கள் உங்களோடு இருக்கிறோம் ... காவல்நிலையத்தில் வழக்கு இருந்தாலே, அந்த குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் கண்காணிப்பில் தான் இருப்பார் ... என் ஐ ஏ சம்பந்தப்பட்ட வழக்குகளில் இருந்தவர், எப்படி கண்காணிப்பில் இல்லாமல் இருந்திருப்பார்? இப்படி அந்த வழக்குகளில் இருந்தவர், அவ்ளோ நாட்டு வெடி குண்டுக்கான மூலப் பொருட்களை வீட்லையா வச்சிருந்திருப்பாரு ? இதுல ஐ எஸ் ஐ எஸ் கூட தொடர்பு படுத்தி பேசப்படுபவர் வெடி குண்டு தயாரிக்க தேவையான பொருட்கள அமெசான் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங்லையா வாங்கியிருப்பாரு ? லாஜிக்கே இல்லையே? கார் சிலிண்டர் வெடிப்பு, எப்படி அண்ணாமலை சொன்னப்பிறகு வெடி குண்டு விஷயமா மாறுது ? காவல்துறையோட புலன் விசாரணை விஷயங்கள்லாம் எப்படி அண்ணாமலைக்கு தெளிவா தெரியுது ? அப்போ வழக்கு விசாரணை அண்ணாமலை ஆர்டர் படி தான் போகுதா ? சம்பந்தப்பட்டவர்களோட வாட்ஸ் அப் மெஸேஜ் ஸ்டேட்டஸ் லாம் அண்ணாமலைக்கு எப்படி கிடைச்சிருக்கும் ? அப்படின்...

செய்தி துளிகள்!

Image

கோவை விபத்து: நியாயமான விசாரணை தேவை!

Image
கோவை கோட்டைமேடு பகுதியில் காரில் ஏற்பட்ட சிலிண்டர் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் ( 25 ) என்பவர் முஸ்லிம் என்பதால் அவர் மீது பிஜேபி தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம் எல் ஏ போன்றோர் தீவிரவாதி என அவதூறு பரப்பி மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். ஒரு முஸ்லிம் பயங்கர விபத்தில் பாலியானதற்கு இந்துத்துவா தீவிரவாதிகள் மீது தானே சந்தேகப்பட வேண்டும்? கோவையில் முஸ்லிம்களுக்கு எதிராக பிஜேபி உள்ளிட்ட மதவாத இயக்கங்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். உயிரிழந்த ஜமேஷா முபீன் மீது எந்த வழக்கும் இல்லை என்று டிஜிபி சைலந்திர பாபு கூறியுள்ளார். குற்றப் பின்னணி இல்லாத ஒருவர் மீது எப்படி இவ்வாறு கூறப்படுகிறது? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே இந்த வழக்கை நியாயமான முறையில் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

உமர் ( ரலி ) காலத்து நாணயங்கள் தமிழகத்தில்!

Image
நன்றி: மணிச்சுடர் நாளிதழ்

நூல் அறிமுகம்: வரலாற்றில் மொழிகள்! - ஆயிஷா நடராஜன்

Image
ஆயிஷா , இது யாருடைய வகுப்பறை போன்ற புத்தகங்களின் ஆசிரியர் ஆயிஷா ஆர் நடராஜன் அவர்களின் மற்றுமொரு சிறப்பான படைப்பு வரலாற்றில் மொழிகள்! ** உலகினில் 6500 மொழிகள் பேச்சு வழக்கில் இருப்பினும் அதில் பழமையானதும் , இன்றும் எழுதி - பேசப்படும் மொழிகளில் ஒரு சில மட்டுமே செம்மொழிகள் என்ற அடைமொழியுடன் திகழ்கின்றது. அவைகளில் சீனம், கிரேக்கம், லத்தீன், அரபு, ஹீப்ரு , சமஸ்கிருதம் , ஆர்மீனியம் மற்றும் பாரசீக மொழிகள் இருந்தாலும் அவற்றுக்கிடையே தமிழ் மொழிக்கு உள்ள மொழி மற்றும் இலக்கிய வரலாறுகளைத் தொகுத்து பேசவேண்டிய பொறுப்பு தமிழை தாய்மொழியாக கொண்ட நம் அனைவரின் பொறுப்பாக இருக்கின்றது. ** அதன் காரணமாக, செம்மொழியான தமிழை மற்ற செம்மொழிகளோடு ஒப்பிட்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் எழுதியிருக்கும் ஒரு புதிய முயற்சியே *வரலாற்றில் மொழிகள்* எனும் இந்நூல்! ** விலை : ரூ.80 அழையுங்கள் Facebook / Twitter / InstaGram ஊடாக Unique Booksஐ* *தொடர்புவையுங்கள்* : Call / WhatsApp / TeleGram / Signal : *9176277692* *பணப்பரிமாற்றம்* : *Gpay : 9176277692 Haja Nawaz உடன்* - ** நவாஸ்

இங்கிலாந்து : ஜனநாயக அதிசயம்!

Image
லண்டன்: இங்கிலாந்து பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் பதவி ஏற்ற 45 நாட்களிலேயே பதவி விலகியுள்ளார். ** இங்கிலாந்தில் ஜனநாயக அதிசயம் அடிக்கடி நடக்கிறது! முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா காலத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் தனது இல்லத்தில் மது விருந்து விழா நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து இந்திய வம்சாவளி அமைச்சர் ரிஷி சுனக் உள்பட சில அமைச்சர்கள் பதவி விலகினர். இதனை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். புதிய தலைவர் போட்டியில் லிஸ் டிரஸ், ரிஷி சுனக் ஆகியோர் களமிறங்கினர். லிஸ் டிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் போரிஸ்ஜான்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக லிஸ் டிரஸ்சை இரண்டாம் எலிசபத் நியமித்தார். அதிக வருமானம் உள்ளவர்களுக்கு 45 சதவீதம் வரி உயர்வு ரத்து செய்யப்பட்டதால், பங்குச் சந்தை சரிந்தது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இதற்கு காரணமான நிதி அமைச்சர் குவாசியை 38 நாளிலேயே பதவி நீக்கம் செய்தார்.புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்பட்டு, வரிக்குறைப்பு வாபஸ் ஆனது. இந்த பிரச்சனை காரணமாக லிஸ் பதவி விலகினார். அங்கே ஜனநாயகம் வா...

தியாகி கவிஞர் அஷ்பகுல்லாகான்!

Image
இன்று தியாகி அஷ்பகுல்லாகானின் பிறந்தநாள். ** தாய் மண்ணான இந்தியாவின் விடுதலைக்காக உயிரைப் பணயம் வைத்து ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த மாபெரும் புரட்சியாளரான அஷ்பகுல்லா கான், 1900 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் ஒரு நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தார். ** இவரது பெற்றோர் ஷஃபிகுல்லாகான் - மஸஹருன்னிசா பேகம். அவரது தாயின் செல்வாக்கின் காரணமாக, அவர் இலக்கியத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். உருதுவில் பாராட்டப்பட்ட கவிஞரானார். பள்ளிப் பருவத்தில் இருந்தே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு, கவிதைகள் மூலம் அரசுக்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்தி வந்தார். ‘ஹிந்துஸ்தான் குடியரசுக் கட்சியின்’ தலைவராக இருந்த ராம் பிரசாத் பிஸ்மில் அவருக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் பிஸ்மில், அஷ்பகுல்லாவிற்கு தனது புரட்சிகர அமைப்பில் உறுப்பினர் பதவி கொடுக்க தயங்கினார். பின்னர், பிஸ்மில் அஷ்பகுல்லாவின் உறுதிப்பாட்டை நம்பி, அவரை ‘ஹிந்துஸ்தான் குடியரசுக் கட்சி’ உறுப்பினராக்க அனுமதித்தார். ** பிஸ்மிலின் தலைமையில் பல நடவடிக்கைகளில் அ...

அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் மீலாது விழா!

Image
அபுதாபி: வருகிற 29/10/2022 சனிக்கிழமை அன்று இரவு அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் கூட்ட அரங்கில் அய்மான் சங்கம் சார்பில் மீலாது விழா நடைபெறுகிறது. அதில் தப்ஸீர் அஷ்ஷஃராவி மொழிபெயர்ப்பாளரும், சிறந்த மார்க்க சொற்பொழிவாளருமான லால்பேட்டை மவ்லானா எம்.ஒய்.முஹம்மது அன்சாரி மன்பஈ கலந்து கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தியாகமிகு முன்மாதிரி வாழ்க்கையை நினைவுபடுத்தி உரையாற்றுகிறார். ஐக்கிய அரபு அமீரக தமிழ் உறவுகள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தகவல்: ஃபவ்சுல் அமீன்

செய்தித் துளிகள்!

Image
நாசாவில் தமிழ் விஞ்ஞானி!

இனிய திசைகள் அக்.2022 இதழில் சேமுமு சிறப்புக் கட்டுரை!

Image

மக்களை முட்டாள் ஆக்கும் பிஜேபி !

Image

வரலாற்றில் ஓர் ஏடு! கான் சாஹிப் மருதநாயகம்!

Image

கும்பகோணத்தில் மாவட்ட ம. ம. க. பொதுக்குழு கூட்டம்!

Image
கும்பகோணம்: தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர்கள் பாதுஷா, உசேன் கனி, மாநில செயலாளர் சரவண பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவராக ஹிபாயதுல்லா, மாவட்ட செயலாளராக முகமது மைதீன், பொருளாளராக பக்ருதீன், தமுமுக மாவட்ட செயலாளராக அப்துல் ரஹ்மான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் ராஜ் முஹம்மது, ரஹ்மத் அலி, முஜிபுர் ரஹ்மான், சம்சுதீன், செல்லப்பா, சலீம் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல்: ஹிபாயத்துல்லாஹ்

நூல் அறிமுகம்: புனித பூமியிலே... நாவல்!

Image
யூனிக் புக்ஸ் நிறுவனத்தின் புதினங்களின் வரிசையில்... சுல்தான் ஸலாஹூத்தீன் அவர்களின் வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலாகும் இது! தமிழகத்தில் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஹஸன் எழுதிய வரலாற்று நாவல்களில் முக்கிய இடத்தில் உள்ளது "புனித பூமியிலே" என்ற புதினமாகும். இஸ்லாமிய உலகின் முக்கிய பிராந்தியமாக திகழும் ஜெருசலத்தினை மையப்படுத்தி நிகழ்த்தப்பட்ட சிலுவை யுத்தங்களின் தொடர்ச்சியாக நிகழ்ந்த மூன்றாம் சிலுவைப் போரின் முக்கிய தளபதி இங்கிலாந்தின் மன்னர் ரிச்சர்ட் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் சிலுவை யுத்தங்களின் தவிர்க்கமுடியாத சுல்தான் சலாஹுத்தீன் அவர்களின் வீரச் செயல்களை கதையம்சமாக - அதே சமயம் வரலாற்று திரிபுகளை கிஞ்சிற்றும் செய்திடாமல் எழுதப்பட்ட காவியமே *புனித பூமியிலே* ஆகும். இந்நாவல் பலஸ்தீனத்தை உள்ளடக்கிய ஜெருசலத்தினை கைப்பற்ற நடத்திய போரை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஜெருசலத்தை மீட்க முடியாத நிலையினை எட்டிய நிலையில் அவர் *சுல்தான் சலாஹுத்தீனுடன்* சமாதானத்தை மேற்கொண்டதைக் கதைக் கருவாகக் கொண்டது. விலை : 2...

நல்லிணக்க நாயகன்!

Image
**இந்திய மக்கள் மனத்தை கொள்ளையடித்த மத நல்லிணக்க நாயகன்! **நாட்டையும் நாட்டு மக்களையும் நேசித்த விஞ்ஞானி! மாணவர்களின் மனம் கவர்ந்த பேராசான்! **நான் இஸ்லாமியன் என சொல்லாமல் செயலில் காட்டினார்! அதன் எளிய - நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தவர்! **கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நபிகள் நாயக வாக்கை வழுவாது பின்பற்றியவர்! **கிராமத்தில் பிறந்து நாட்டின் அதிபராய் - குடியரசுத் தலைவராய் உயர்ந்து தம் வாழ்வைப் பாடமாய் படிக்க வைத்தவர்! எல்லோரும் ஏற்றுக் கொண்ட மாமனிதர்! **இளைஞரை கனவு காணச் சொல்லி லட்சியம் நோக்கி நடைபோடச் செய்தவர்! வாழிய அவர் புகழ் வாழியவே! - ** மீராப்பிரியன்

குந்தவை நாச்சியாரும் இஸ்லாம் மார்க்கமும்!

Image

அல் அலீம் அத்தர்ஸ்!

Image
السلام عليكم ورحمة الله *மதிப்பு மிகு உலமாக்களே !* *மரியாதை மிகு வியாபாரிகளே !* *பாச மிகு வாடிக்கையாளர்களே !* *நமது அல் அலீம் அத்தர்ஸ் ஹோல்சேல் வியாபாரம் தங்களின் பேராதரவினால் சிறந்த முறையில் நற்சேவையாற்றி வருகிறது.* ப்யூரான கலப்படமில்லாத லாங் லாஸ்டிங் உள்ள அத்தர்கள் என்பதே நமது *அல் அலீம்* தனி சிறப்பு. *மாதந்தோறும்* *ஒரு சலுகையை ஆஃபரை அறிமுகம் செய்து* *உங்களைப் போன்ற வியாபாரிகளின் நன் மதிப்பை பெற்று வருவது பெரும் சந்தோஷம் அளிக்கிறது.* الحمد لله والشكر لله 💎💐💎🌹 *தற்பொழுது மிகவும் பெரிய சலுகையை உங்களுக்காக , அடிக்கடி வாங்குபவர்களுக்காக அள்ளி தருகிறது.* 🏆♦️ *பல வாசனைகள் கலந்து 90 Box , பாட்டில்களுக்கு* 🏆♦️🔹 *90 பாட்டில்கள் இலவசமாக வழங்குகிறது .* 👆👆👆👆 *உங்களின் முதலீடு 5500 ரூபாய் மட்டுமே .* 💯 *அதன் MRP மதிப்பு 14,430 ரூபாய்.* 💯 👈 *163 % இலாபம் உள்ளது.* 👈 *மரியாதை மிகு தாங்களும் கூட இலவசம் , ஆஃபர், சலுகை விலை அறிவித்து* *கஸ்டமர்களை கவரலாம் .* *விளக்கம் தேவையானால் சொல்லி தருகிறோம்.* *உடனே தொடர்பு கொள்ளுங்கள் .* *உங்களுக்கு தேவை...

தமிழ்ச் செம்மல் விருது!

Image
நாகூரில் சாஹிப்ஜாதா தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணைந்து நடத்திய விழாவில் முஸ்லிம் கவிஞர்கள் - இலக்கியவாதிகளுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டது. இதில் பன்னூல் ஆசிரியர் தாழை மதியவன் ( படம் ), இதழாளர்- எழுத்தாளர் - சமூக சேவகர் முனைவர் தமீமுல் அன்சாரி நிஜாமி, இலக்கியச் செம்மல் பேராசிரியர் சாயபு மரைக்காயர், பேராசிரியை சா. நசீமா பானு, மூத்த கவிஞர் காதர் ஒலி மற்றும் எழுத்தாளர்கள் விருது பெற்றனர்.

இந்தி திணிப்பும் தாய் மொழிகள் அழிப்பும் அனுமதிக்கலாகாது!

Image
* இந்தியாவிலேயே முதன் முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீகாரின் நிலையைப் பாருங்களேன்! ஆனால் பீகாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி. * உத்தரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான்! அதன் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்து கொள்ளுங்கள்! ஆனால் வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்ட்! * வடகிழக்கு உ.பி.யின் தாய்மொழி போஜ்புரி, பிரதாப்கர்! மத்திய உ.பி.யில் பேசப்படுவது ஆவ்தி, பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப் படுகிறது. * அடுத்ததாக உத்தரகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் கூடுதல் அலுவலக மொழி. ஆனால் உத்தரகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி! * அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான். ஆனால் தாய்மொழி ஹரியான்வி! * ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி! ஆனால் தாய்மொழிகள் ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி! * மத்திய பிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி! ஆனால் தாய் மொழிகள் உருது, மால்வி, நிமதி, அவதி, பகேலி! * காஷ்மீரின் தாய்மொழி கஷ்மீரி மற்றும் உருது! ஜம்முவின் தாய்மொழி டோக்ரி, ப...

பொன்னியின் செல்வன் - வரலாறும் திரிபும்!

Image
உண்மை வரலாற்றில் ஆதித்த கரிகாலனை கொன்றது நம்பூதிரி பிராமணர்கள். அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை அவர்கள் குடும்பத்தோடு நாடு கடத்தினான் ராஜராஜன். மேலும் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட கேரளாவில் உள்ள சாலை என்ற பகுதியில் இருந்த பிராமண பயிற்சி நிலையங்களை அழித்தவன் ராஜராஜ சோழன். அதனால் காந்தளூர் சாலை களம் அறுத்து அருளி என்ற பெயர் பெற்றவன் ராஜராஜன். சோழர்களின் காலத்தில் கோயில்களில் தமிழில் தான் வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் சிதம்பரத்தில் நம்பூதிரி பிராமணர்கள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் திருமறைகள் ராஜராஜனின் முயற்சியால் தமிழர்கள் கைக்கு கிடைத்தது. ஏடு கண்டானடி தில்லையிலே என்ற பாடல் கூட பழைய ராஜராஜன் படத்தில் வரும். வரலாறு இப்படி இருக்க கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் சோழர்களுக்கு விசுவாசமானவராக ஆழ்வார்கடியான் என்ற ஒரு பிராமணனை காட்டியிருப்பார். உண்மை வரலாற்றில் பழவேற்றரையர்கள் சோழர்களுக்கு மிகவும் விசுவாசம் ஆனவர்கள். ஆனால் நந்தினி என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி இவர்களை தவறானவர்கள் போல சித்தரித்து இருப்பார் கதையில். கற்பனை கதாபாத்திரம் நந்தினி போன்ற இழிவான குணாதி...

அற்புதக் காட்சி!

Image
இந்த ஊடகவியலாளரின் கோபம் நியாயம் தானே? நன்றி: எம்.ஜி.ஆர். டிவி

துபை நூலகத்திற்கு தமிழக நூல்கள் அன்பளிப்பு!

Image
துபை நகரின் ஜடாப் பகுதியில் அமைந்துள்ள முஹம்மது பின் ராஷித் நூலகத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக பிரிவின் தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன், நூலகத்தின் ஆலோசகர் டேவிட் ஜெரால் ஹிர்ச்சிடம் சமீபத்தில் கல்லூரியில் வெளியிடப்பட்ட பிரான்ஸ் நாட்டு வரலாற்று அறிஞர் J.B.P. மோரே எழுதிய 'JAMAL MOHAMED INDIAN MERCHANT PRINCE AND NATIONALIST' என்ற நூல் வழங்கப்பட்டது. மேலும் கல்லூரியில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் ராஜா முஹம்மது தொகுத்தளித்த 'MUSLIMS OF TAMILNADU IN THE INDIAN FREEDOM STRUGGLE' என்ற ஆங்கில நூலும் வழங்கப்பட்டது. அப்போது முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், தஞ்சாவூர் மன்னர் மன்னர், கூத்தாநல்லூர் பெரோஸ் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ***** தகவல்: ஜமால் முஹம்மது

நபிகள் நாயகம் பிறந்தநாள்!

Image
இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி ( ஸல் ), நபிகள் நாயகம் என்று போற்றப்படுகிறார். வானவர் தூதர் ஜீப்ரீல் மூலம் ஒவ்வொரு வசனமாக நபிகள் நாயகத்தின் காதில் ஓதி இறுதி வேதம் குர்ஆனை இறைவன் உலக மக்களுக்கு அனுப்பி வைத்தான். நபிகளாரின் வாழ்வும் வாக்கும் ஹதீஸ் என அழைக்கப்படுகிறது. ஆதி மனிதர் ஆதம் நபி காலத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கம் இறைவனால் வழங்கப்பட்டு, முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு உலக மக்களுக்கு வாழ்வியல் நெறியாக வழிகாட்டி வருகிறது. உலக அமைதி, சமாதானம், அன்பு, சகோதரத்துவம், வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் அன்றாடம் வழிகாட்டும் ஒளி விளக்காக நபிகள் நாயகத்தின் வாழ்வு - சொல்லும் செயலும் இருக்கிறது. அனைவருக்கும் மீலாது நபி (முஹம்மது நபியின் பிறந்தநாள்) வாழ்த்துக்கள்! **** - ஜே.மீராமைதீன், மூத்த பத்திரிகையாளர்.

மீலாது நபி தின மருத்துவ முகாம்!

Image
திருச்சி "அஞ்சுமன் ஹிமாயத்தே இஸ்லாம்"அமைப்பின் நூற்றாண்டு விழா தொடக்கமாக நபி (ஸல்) பிறந்த தினத்தை முன்னிட்டு மகாத்மா கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் 9 -10 - 2022 அன்று நடைபெற்றது. ** தகவல்: மீரான் மிஸ்பாஹி

சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கல்லு பள்ளிவாசல்!

Image
**தஞ்சாவூரை ஆட்சி செய்த அருள் மொழி வர்மன் என்கிற ராஜ ராஜ சோழன் (947) பிறப்பதற்கு 208 ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய திருச்சி கோட்டை இரயில் நிலையம் நேர் எதிர்ப் புறம் இருக்கும் பள்ளிவாசல் கி.பி 738 ( 116 ஹிஜ்ரி) ஆண்டு தமிழ் கட்டிடக்கலையில் சோழர்கள் ஆட்சி பகுதியில் கட்டப்பட்ட முதல் கல்லு பள்ளிவாசல். அப்போது உறையூரை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட சோழ மன்னனின் ஆட்சிக் காலத்தில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் மிகத் தொன்மையான பள்ளிவாசலில் இந்த கல்லுப் பள்ளியும் ஒன்று! சுமார் 50 நபர்கள் வரிசையில் நின்று தொழுகை நடத்தும் அளவிற்கு இடம் கொண்டது. பிற்காலத்தில் அதிகம் பேர் தொழுவதற்காக அப்பள்ளிவாசல் வெளிப்புறம் விரிவாக்கம் செய்துள்ளனர். கி.பி 7ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் கி.பி 8 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் இஸ்லாமிய மார்க்கம் தமிழர்களின் வாழ்வோடும் இரண்டறக் கலந்து அறிமுகமாகி இருந்தது என்பதற்கு இந்த இந்த கல்லுப் பள்ளி ஒரு சான்றாகும். தற்போது அதை மக்கா பள்ளிவாசல் என்று அங்குள்ள உள்ளூர்வாசிகளால் பெயர் வைத்து அழைக்கப்படுக...

இயற்கை மருத்துவம்!

Image
இயற்கை முறையில் காய்ச்சல் சளியை சரி செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால் வாழ்நாள் நோயாளிகள் தான்! தற்போது பரவலாக காணக்கூடிய அறிகுறிகளில் வெறுமனே சளி, காய்ச்சல் என்றால் கூட எதனால் வந்தது என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்திருக்கலாம். தலைவலியும் இருக்கலாம். அச்சபடத் தேவையில்லை. இப்போதைக்கு வெதுவெதுப்பான (மிக லேசான) சூட்டில் நிறைய நீர் அருந்துங்கள்...இரண்டு மூன்று நாளில் தானாகவே சரியாகி விடுகிறது! சுக்கு - கொத்தமல்லி- பனங்கற்கண்டு கசாயம், குப்பைமேனி கசாயம், லெமன் டீ, 2 அரிசி எடை அளவு கடுக்காய் தோலை வாயில் சப்புதல், ஆவி பிடித்தல், சூடான சாப்பாட்டை நன்றாக மென்று சாப்பிடுதல், நல்ல ஒய்வு இவற்றை கடைபிடியுங்கள்! ***** - மருத்துவர் ரியாஸ் ******************** காணொலி: மின் கடடணம் அதிகரிப்பு என்பதை விட அதன் டாரிப் - வகை பிரித்து வசூலிப்பதுதான் மக்களுக்கு அதிக சுமை! வாக்குறுதி அளித்தபடி மாதா மாதம் கட்டணம் வசூலித்தால் கொஞ்சம் குறையும்!