Posts

Showing posts from January, 2023

நூல் அறிமுகம்: மகாத்மா காந்தி படுகொலை - புதிய உண்மைகள்!

Image
பாசிசத்தை அறியும் புத்தகங்களின் வரிசையில்..... *மகாத்மா காந்தி கொலை வழக்கு புதிய உண்மைகள் - அப்பு எஸ்தோஸ் சுரேஷ், பிரியங்கா கோட்டம்ராஜூ* தன் வாழ்நாள் முழுதும் ஹேராம் என்று கூறியவர், சனதனத்தினை வலுவாக பிடித்துக்கொண்டிருந்தவர் , இறக்கும் வரையிலும் பிராத்தனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர். அப்படி இருந்தும் ஏன் காந்தியடிகள் கொல்லப்பட்டார்? அதுவும் கோட்சே எனும் பார்ப்பணரால்! காந்தி இந்துவாக இருந்தார்... கோட்சே இந்துத்துவா ஆக இருந்தார் என கூறி கடந்துப்போனாலும், இன்று கோட்சேவை கதாநாயகனாக ஆக்கிடும் நிலை ஆட்சியாளர்களால் வெளிப்படையாகவே செய்யப்படுகின்றது. இதற்கு என்ன காரணங்கள் முதன்மையாக இருக்கும் என ஆராய்ந்தால் அதற்கு கிடைத்திடும் பதிலே இந்நூல். காந்தியின் மீது ஒரு சாரார் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சியின் அடிப்படை என்ன? அந்த வெறுப்பு உணர்ச்சி கோபமாகவும், பின் வெறியாகவும் மாறிய தருணம் எது? கோட்சே எப்படி உருவாக்கப்பட்டான்? சதித்திட்டங்கள்? படுகொலைக்கான திட்டமிடல்கள்? இறுதியாக படுகொலை என பதைபதைக்க வைக்கும் பல நிகழ்வுகள் அடுத்தடுத்து மறைக்கப்பட்ட பல தகவல்களை கொண்டு உங்கள் மனக்கண்ணை...

காஷ்மிரில் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு!

Image
ஸ்ரீநகர்: தேசிய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 12 மாநிலங்களைக் கடந்து 3,570 கி.மீ. பயணம் செய்து இந்திய மக்கள் மனதில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு செப். 7ம் தேதி கன்னியாகுமரியில் இந்த ஒற்றுமை பயணத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்வேறு மாநில பயணங்களில் ராகுல் காந்தி ஒன்றிய பிஜேபி - மோடி அரசின் மதவாத - பிற்போக்கு ஆட்சியைத் தோலுரித்துக் காட்டினார். அவருக்கு காஷ்மிரில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகபூபா முப்தி, அவரது மகள் இல்திஜா முப்தி உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். அவரது தங்கையும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். ஜன.29 அன்று இந்த லட்சியப் பயணம் நிறைவடைந்து, 30ம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி, எஸ்.கே. விளையாட்டு அரங்கில் நிறைவு விழா நடைபெற்றது. இதில் 23 எதிர்க் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். ( செய்தி புதுப்பிக்கப்பட்ட நாள்: ...

கோட்டாரில் நிகழ்ச்சி : தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி?

Image
*10th, +1, +2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி | ஜனவரி 29* தேதியில் நடைபெறுகிறது. * தேர்வு திறன்களை (Examination Skill) வளர்த்து கொள்வது எப்படி ? * புரியாத பாடங்களை எப்படி படிப்பது ? * தேர்வு பயத்தைப் போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத * தேவை உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி சார்ந்த Personal Counseling வழங்கப்படும். *நாள் : ஜனவரி-29 (29-01-2023) ஞாயிற்றுக் கிழமை* *நேரம் : காலை 10 மணிக்கு* *இடம் : அல்மின்ஹாஜ் மதரசா வளாகம், 55A/1, கச்சேரிரோடு, கோட்டார், நாகர்கோவில்* *வழிகாட்டல் வழங்குபவர்:* S.சித்தீக் M.Tech (கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி) மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம். *நிகழ்ச்சி ஏற்பாடு :* அல்மின்ஹாஜ் மதரசா, கோட்டார். ************************ * நமது செய்தி* யில் உங்கள் செய்திகள், சிந்தனைகள், விளம்பரங்கள் இடம் பெற 9841520645 வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கவும்.

டி யூ ஜே தலைவர் புருஷோத்தமன் வாழ்த்து!

Image
எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும்! இங்கு, இல்லாமை இல்லாத நிலை வேண்டும்! வல்லான் பொருள்குவிக்கும் நிலைமாறி, வரவேண்டும்! திருநாட்டில் பொதுவுடமை சமுதாயம் படைப்போம்! ஊடகங்களை பாதுக்கப்போம்! ஊடக சுதந்திரத்தை பாதுகாப்போம்! ஊடகவியலாளர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்! அனைவருக்கும் 74- வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! ** - பி.எஸ்.டி. புருஷோத்தமன், மாநிலத்தலைவர், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ்.

தமிழ்நாடு என்பதே நமக்குப் பெருமை!

Image
இந்திய ஒன்றியத்தின் பெரும்பாலான மாநிலங்களின் பெயர்கள் அந்தந்த இன மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அம்மக்களின் நிலம், தேசம், நாடு என்ற வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு மட்டும் தான் ஏதோ தனிநாடு என்ற வகையில் பெயரிடப்பட்டுள்ளதாக பாசிசவாதிகள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைத்தால் (அது முடியாது என்பது வேறு தகவல்) முதலில் மிகப்பெரிய நாடு என தன் மாநிலத்திற்கு பெயர் வைத்துள்ள 'மகாராஷ்டிரா' வின் பெயரை மாற்ற வேண்டும். முதலில் அம் மாநிலத்தை பிரிக்க ஒன்றிய அரசுக்கு தைரியம் உள்ளதா? அத்துடன், - ராஷ்டிரா என்றால் தேசம் - நாடு (Nation & Dominion) என்று பொருள். மகாராஷ்டிரா மாநிலத்தின் பெயரை மாற்றலாமா? - பிரதேசம் என்றால் நிலம் , துணைப் பகுதி அல்லது துணை நாடு என்று பொருள். இதன் அடிப்படையில் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பெயர்களை மாற்றலாமா? - 'கண்ட் ' என்றால் நிலம் என்று பொருள். இதன் அடிப்படையில் ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பெ...

டிக்கெட் போதும் - விசா தேவையில்லை! - சவூதி ஏர்லைன்ஸ்

Image
ஜித்தா: டிக்கெட் வாங்கும் போது இலவச சுற்றுலா விசா வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று சவுதி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் ஷஹ்ரானி தெரிவித்தார். டிக்கெட் வாங்கும் போது வேறு கட்டணம் ஏதும் செலுத்தாமல் சுற்றுலா விசா வழங்கும் சேவை இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி ஏர்லைன்ஸின் இதனை "உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா என்று" பெயரில் அழைக்கிறது. இந்த விசாவில் நீங்கள் சவுதியில் 96 மணிநேரம் (நான்கு நாட்கள்) செலவிட அனுமதிக்கும். இந்த நேரத்தில் பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம் மற்றும் உம்ரா செய்யலாம். சுற்றுலா மற்றும் உம்ரா யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்கு வருபவர்களுக்கு இந்த புதிய சேவை பெரும் பயனளிக்கும். சவுதி ஏர்லைன்ஸின் புதிய டிக்கெட் முன்பதிவு முறையில், பயணிகள் டிக்கெட் முன்பதிவுடன் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். டிக்கெட் புக் செய்யும் போது விசா தேவையா என்ற கேள்வியும் இருக்கும். விசா தேவைப்படுபவர்கள் மூன்று நிமிடங்களுக்குள் செயல்முறையை முடிக்க முடியும். சில நாடுகளில் வெளியுறவு அமைச்சகத்தின் இண...

சென்னையில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

Image
* என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை மக்கா மஸ்ஜிதில் வரும் ஞாயிறு 22ம் தேதி நடைபெறுகிறது. * துறை சார்ந்த திறன்களை மேம்படுத்துவது எப்படி ?* * சட்டம் மற்றும் மருத்துவக் கல்வி வழிகாட்டுதல்* * தேவை உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்கப்படும் * நாள் : 22-01-2023 ஞாயிற்றுக் கிழமை* * நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை * * இடம் : மக்கா மஸ்ஜித், அண்ணா சாலை , சென்னை-2 * * வழிகாட்டல் வழங்குபவர்: * S.சித்தீக் M.Tech (கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி) மற்றும் பல் துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று வழிகாட்ட உள்ளனர். மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். நிகழ்ச்சி ஏற்பாடு : * UNITED PROFESSIONALS TRUST(UNIPRO), Chennai * Registered No:48/2022 | mail: info.uniproteam@gmail.com | www.uni-pro.org

ஆட்டோ ஓட்டுநர் மகள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் அதிகாரி!

Image
மத்திய பிரதேசம் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் சனா அலிகான், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( இஸ்ரோ ) தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டில் சிறுபான்மையினருக்கு பாசிச சக்திகளால் பல்வேறு தடைகளும் சிக்கல்களும் ஏற்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் பெண்கள் சிலர் சாதனை படைத்து வருவது பாராட்டுக்குரியது. ********************** ( *நமது செய்தி* யில் உங்கள் செய்தி இடம்பெற உங்கள் செய்தியை சுருக்கமாக எழுதி அனுப்ப வேண்டும். ஒளிப்படம் தனியாகவும் செய்தி தனியாகவும் வாட்ஸ் அப்பில் அனுப்பவும். எமது வாட்ஸ் அப் எண்: 9841520645 - ஆசிரியர் - இயக்குநர்.)

புதிய முயற்சி : சிறையில் நூலகங்கள் அமைக்கும் பணி!

Image
சென்னை: சிறைத் துறை டி ஐ ஜி முருகேசன் (அட்மின்) முயற்சி காரணமாக தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளில் புதிதாக நூலகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்கு வழங்க சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருகை தரும்பொது மக்களிடம் இருந்து புத்தகங்கள் இலவசமாக பெறப்படுகிறது. அதன் அறிவிப்பும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிறைத் துறை நூலகத்திற்கு இலவசமாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வெளியீடான திருகுர்ஆன் தமிழாக்கத்தை டிஐஜி முருகேசன் (அட்மின்) அவர்களிடம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர், பொருளாளர் பிர்தெளஸ், மாநில செயலாளர் தக்வா மொய்தீன் ஆகியோர் வழங்கினார்கள். இந்த முயற்சி சிறையில் இருப்பவர்களை பண்படுத்த உதவும் என்றும் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை புத்தக திருவிழா காட்சிகள்!

Image

கவிதை: சாதி மத பேதம் இல்லா பொங்கல் திருநாள்!

Image
பொங்கல் திருநாள் - இன்று பொங்கல் திருநாள்! புத்தாண்டு இன்று தொடங்குதம்மா... எங்கள் திருநாள்- இது எங்கள் திருநாள்! ஏற்றத்தாழ்வுகள் இல்லையம்மா... சாதி இல்லையே எந்தச் சார்பும் இல்லையே! வாதம் இல்லையே மதபேதம் இல்லையே...! வம்பும் இல்லையே சிறு சண்டை இல்லையே! அல்லல் இல்லையே ஒரு தொல்லை இல்லையே...! துன்பமில்லையே இன்பம் கொள்ளை கொள்ளையே...! ஆசை இல்லையே கையில் காசும் இல்லையே! வேட்டும் இல்லையே தொட்டால் தீட்டும் இல்லையே! கூட்டம் இல்லையே பெரும் கூச்சல் இல்லையே! செங்கரும்பையே இளைஞர் தின்பதில்லையே! டாஸ்மாக்கிலே கூட்டம் தாங்கவில்லையே...! பொங்கல் திருநாள் - இன்று பொங்கல் திருநாள்! ** - கவிஞர் இக்பால் ஹசன் **

ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு மாநாடு!

Image
சென்னை: மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ, எஸ்டிபிஐ மாநில செயலாளர் கரீம், மமக துணை பொதுச் செயலாளர் யாக்கூப், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர்கள் சையது அலி, ஜாகிர் உசேன் என பல தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் துணை தலைவர் முஹம்மது முனீர் பேசியபோது, பாரம்பரியம், பண்பாட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை உரிய உயிர் பாதுகாப்புடன் பாதுகாக்க வேண்டும். இன்று ஜல்லிக்கட்டில் சுப்ரீம் கோர்ட்டில் தடை கோருவார்கள், நாளை ஆன்மீக நம்பிக்கையான குர்பானி மற்றும் பல்வேறு மத நம்பிக்கை, பலியிடுதல் ஆகியவற்றில் தடை கோருவார்கள். ஏற்கனவே தமிழ் நாட்டில் ஒட்டக குர்பானிக்கு தடை பெற்று விட்டார்கள். நாம் ஒற்றுமையுடன் களம் காண வேண்டும். ரம்மி, நீட் போன்ற சட்டமன்ற தீர்மானங்களில் கையெழுத்துப் போடாத தமிழ்நாடு கவர்னர் ரவியின் செயல் கண்டிக்கத்தக்கது. தமிழகம் என்பதை விட தமிழ்நாடு என்பதை நாம் உரக்க முழங்குவோம். ஷரியத் சட்டத்தில் கை வைக்கும் பாசிச பிஜேபி ஒன்றிய அரசின் பொது சிவ...

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்!

Image
சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர்! ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கின்றனர். இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும். * இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் ஆன்மீகவாதியான விவேகானந்தர், " இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார். இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களை பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யைத் தொடர்ந்து சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர் * பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது என்றார். *முதல் செய்தி சமத்தவம். ஒரே மதம் தான் உள்ளது. அதில் * அன்பு, வம்சம், நிறம் அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது * என்று கூறினார் . இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! சுவாமி விவேகானந்தர் மேலும் பேசுகிறார்: * ”இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்ப...

செஸ் கிரேண்ட் மாஸ்டர் : 16 வயதில் சாதனை!

Image
காரைக்குடி: தனது 16 வயதில் செஸ் கிரேண்ட் மாஸ்டர் ஆகி சாதனை படைத்துள்ளார் பிரானேஷ் என்ற மாணவர்! * சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் ரில்டன் கோப்பைக்கான பன்னாட்டு சதுரங்க போட்டி சுவீடன் தலைநகரம் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. இதில் 29 நாடுகளைச் சேர்ந்த 136 வீரர்கள் பங்கேற்ற நிலையில் இந்தியா சார்பில் தமிழக வீரர் பிரானேஷ் பங்கேற்று 8 புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். 5 வயது முதல் செஸ் விளையாடி, இப்போது இந்தியாவின் 79வது கிரேண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். காரைக்குடி அருகே புதுவயல் வித்யாகிரி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு காரைக்குடியில் பள்ளியின் சார்பிலும் பொது மக்கள் சார்பிலும் பாராட்டு குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பாராட்டி கவுரவித்துள்ளார்.

செய்தித் துளிகள்!

Image

ஐ எப் டியின் நூல்கள் வெளியீட்டு விழா!

Image
சென்னை புத்தகக் காட்சியில் அமைந்துள்ள இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் அரங்கு எண் *F46*இல் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட *அல்லாஹ்வின் அற்புதங்கள்* தொடர் நூல்கள் (14 புத்தகங்கள்) வெளியீட்டு விழா 10 -1 - 2023 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சென்னை காயிதே மில்லத் ( ஆண்கள் ) கல்லூரி முதல்வர் டாக்டர் எம். அம்துல் தவாப் கலந்து கொண்டார். *மனிதர்கள்* நூல் பற்றி *M.சாரோன் பிரியதர்ஷினி* ( வகுப்பு-9, குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல், செங்குன்றம், சென்னை ), *கடல் விலங்குகள்* நூல் பற்றி *H. ஈசா - அல்- ஹானீ* ( வகுப்பு - 8, குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல், செங்குன்றம், சென்னை ), *சூரியனும் சந்திரனும்* நூல் பற்றி *M.ஜியா ஹெபா* ( வகுப்பு - 8, குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல், செங்குன்றம், சென்னை ) ஆகியோர் ஆய்வுரை வழங்கினர்.

முனைவர் பேரா. சேமுமு வாழ்த்து!

Image
🌹🌹🌹 இனிய திசைகள் மாத இதழ் ஆசிரியர் - இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவர் - தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் முனைவர் பேராசிரியர் சேமுமு. முகமதலி அவர்கள் ** மூத்த இதழாளர் - எழுத்தாளர் ஜே. மீராமைதீன் ( ஆசிரியர்- இயக்குநர், நமது செய்தி இணைய ஊடகம் ) அவர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி!

நூல் அறிமுகம் : பஞ்சம், படுகொலை, பேரழிவு -கம்யூனிஸம்!

Image
*பஞ்சம் படுகொலை பேரழிவு - கம்யூனிஸம் * - அரவிந்த் நீலகண்டன் ***** கம்யூனிஸம் உலகுக்கு வழங்கிய கொடைகளை பல்வேறு ஆய்வாளர்கள் எண்ணி வகைப்படுத்துவார்கள். ஆனால் கம்யூனிஸத்தால் பஞ்சம், படுகொலை, பேரழிவுகள் நிகழ்ந்தனவா? என ஆராய்ந்ததில் விளைவே இப்புத்தகம். கம்யூனிஸத்தின் பெயரால் உலகெங்கும் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். லெனின், ஸ்டாலின், மாவோ என்று கம்யூனிஸத் தலைவர்களுக்குள்ளும் ரத்தம் தோய்ந்த வரலாறுகள் உண்டா? சக தோழர்களையே அவர்கள் வேட்டையாடினார்களா? புக்காரினும் -டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள்? ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார்? வதை முகாம்கள் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா? கம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேரு கம்யூனிஸத்தின் மீது நம்பிக்கை கொண்டவரா ? தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை மையப்படுத்தி இப்புத்தகம் எழுதப்பட்டதுள்ளது. எனக்கு பிடித்த கம்யூனிஸத்தை கொஞ்சம் வெளியே இருந்தும் பார்க்கலாமே/அறியலாமே என தேடியதால் இப்புத்தகம் நம் முன்! அதனால் அதற்காக இப்புத்தகமே என்னுடைய கருத்தாக ஆகி...

நூல் அறிமுகம் : புர்தாஹ் ஷரீஃப்!

Image
புர்தாஹ் ஷரீப் மூலம் : இமாம் பூஸிரி (ரஹ்) தமிழ் கவியாக்கம் - பொருளுரை: - செய்யிதுராவுத்தர் மௌலவி S.K.M. ஜெகபர்தீன் உலவிய்யு கூத்தாநல்லூர். (பேராசிரியர் மன்ப உல் உலா அரபிக் கல்லூரி கூத்தாநல்லூர்.) *********************** ( நூலில் இருந்து ஒரு பகுதி இங்கே வெளியிடப்படுகிறது : ) அத்தியாயம் 6 கவிதை 88 தலைப்பு : திருக் குர்ஆன் சிறப்புகள்  ************************* புர்தா கவிதை : 88. دعنى ووصفي ايات له ظهرت ظهور نار القرى ليلا على علم . தமிழில் : விருந்துக்கு மலையில்லிரவு எரியும் தீ வெளியாவதாய் வெளியான அவரற்புதங் களை சொல்ல என்னை விடு. ********************** பொருள் : (அரபியர் பொது விருந்துக்கு மக்களை அழைப்பதற்காக அருகிலுள்ள மலை மீது ஏறி தீ மூட்டுவர். ஜுவாலை விட்டு எரியும் அத்தீயைக் கண்ட மக்கள் மறுநாள் அம்மலையடிவாரத்தின் அருகில் நடைபெரும் விருந்தில் கலந்து கொள்வர். இவ்வாறு) விருந்துக்கு (அழைப்பு விடுப்பதற்காக) இரவு நேரத்தில் மலை மீது மூட்டப்படும் தீ (பளிச் என்று ) தெரிவது போல் (தெள்ளத் தெளிவாக தெற்றென நபியவர்களின் முஃஜிஸாக்கள் அனைத்து...

தமிழக ஊடகங்களை அடிமையாக்க பிஜேபி முயற்சி! - ஆம் ஆத்மீ வசீகரன்

Image
சென்னை: பத்திரிகை ஜனநாயகம் காத்திட, பத்திரிகையாளர்கள் - பத்திரிகையாளர் சங்கங்கள் ஒன்று பட வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தாக்கிப் பேசுவதையும், அவமானப்படுத்துவதையும் தொடர் வேலையாக செய்து கொண்டிருக்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளரை மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அவரை தனியாக தன் அறைக்கு அழைத்து மிரட்டும் காட்சிகள் எல்லாம் நாம் தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் பார்த்தோம். அண்ணாமலை ஏற்கனவே பத்திரிகையாளர்களை ஏலம் விட்டார், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாக பேசினார். யூ டியூப் வலைதள பத்திரிகையாளர்களை நீங்கள் பத்திரியாளர்கள் இல்லை என்பது போல் சொல்கிறார். பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். இதுவரை தமிழக வரலாற்றில் தலைவர்கள் யாரும் இவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டதில்லை. தமிழக அரசு குறித்த சில ஊழல்களுக்கு ஆதாரம் தன்னிடம் உள்ளது. அதை நீ வெளியிடுவாயா என்று புதிய தலைமுறை செய்தியாளரை பார்த்துக் கேட்கிற...

நாகூர் தர்காவில் அரசு பொது கணக்கு குழு!

Image
நாகூர்: தமிழக அரசு பொது கணக்கு குழு தலைவர் கு. செல்வ பெருந்தகை, உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா , பூண்டி கலைவாணர் மற்றும் அரசு செயலர்கள் நாகூர் தர்கா வருகை புரிந்தனர். அவர்களுடன் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் தம்பு ராஜ் வருகை புரிந்தார்கள். நாகூர் தர்கா அட்வைசரி பிரசிடன்ட் கலீபா சாஹிப் அனைவரையும் வரவேற்று சால்வை அணிவித்தார். பின்னர் நாகூர் ஆண்டகை தர்காவினுள் சென்று பாத்திஹா ஒதி் துஆ செய்யப்பட்டது. தர்கா நிர்வாகம் சார்பாக கட்டிடங்களை புதுப்பிக்க அரசு உதவி கோரப்பட்டது. வருகை புரிந்த அனைவருக்கும் அரிய நாகூர் தர்கா புகைப்படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள், தர்கா மானேஜர், நாகூர் ஜமாஅத் நிர்வாகிகள் உடனிருந்தனர். ( தகவல் மற்றும் புகைப்படம் : நாகூர் தர்கா அலுவலக செய்தி மற்றும் ஊடகப்பிரிவு.)

இனிய புத்தாண்டு 2023 வாழ்த்துகள்!

Image
வாசகர்கள் - நேயர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! -ஜே. மீராமைதீன், ஆசிரியர் - இயக்குநர். ( இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர், இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு மாத இதழ் ஆசிரியர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் முனைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து! )