அவதூறு செய்தவர் படுகொலை: தீவிரவாதிகளுக்கு தொடர்பு இல்லை!
இறைத்தூதர் என்று உலக மக்களால் போற்றப்படும் நபிகள் நாயகம் ( ஸல் ) பற்றி அவதூறு கூறிய நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட கண்ணையா லால் என்பவரை இருவர் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இல்லை என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த கொலைக்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சமய நல்லிணக்கத்திற்கு எதிராக சில மதவாத அமைப்புகள், தனி நபர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.